Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் அடக்குமுறையை செயற்படுத்தும் மைத்திரி: முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு
Page 1 of 1
மகிந்தவின் அடக்குமுறையை செயற்படுத்தும் மைத்திரி: முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்படுத்தி வந்த அடக்குமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செயற்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது பிரிவின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பெப்ரவரி 3 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 1900/4 வர்த்தமானி அறிவித்தல் பற்றி விடயங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு நாட்டிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை தவிர சில மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் தேசிய நீர் நிலைகள் இராணுவ அழைக்கப்படும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாதாரண சட்டத்திற்கு அமைய பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், சட்டம் மற்றும் அமைதிகாக்கும் பணிகளுக்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.
அவசரகால சட்டத்தின் கீழ் பொலிஸாரின் இந்த சட்டம் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. கைது செய்தல், வாகனங்களை சோதனையிடுதல், வாகனங்களை நிறுத்துதல், வீடுகளை பரிசோதித்தல், அடையாள அட்டை பரிசோதித்து அடையாள உறுதிப்படுத்தல் போன்ற பொலிஸாரின் அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முப்படையினருக்கு வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. இதன் மூலம் முப்படையினருக்கு இருந்த பொலிஸ் அதிகாரங்கள் இரத்தானது. இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி வழமையான சட்டத்தின் மூலம் பொது அமைதி குலையும் விசேடமான சந்தர்ப்பங்களில் இராணுவத்தை அழைக்க முயற்சித்தார்.
மகிந்த ராஜபக்ச செய்ததையே மைத்திரிபால செய்துள்ளார். தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கியுள்ளார் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது பிரிவின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பெப்ரவரி 3 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இலக்கம் 1900/4 வர்த்தமானி அறிவித்தல் பற்றி விடயங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு நாட்டிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை தவிர சில மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் தேசிய நீர் நிலைகள் இராணுவ அழைக்கப்படும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாதாரண சட்டத்திற்கு அமைய பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், சட்டம் மற்றும் அமைதிகாக்கும் பணிகளுக்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.
அவசரகால சட்டத்தின் கீழ் பொலிஸாரின் இந்த சட்டம் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. கைது செய்தல், வாகனங்களை சோதனையிடுதல், வாகனங்களை நிறுத்துதல், வீடுகளை பரிசோதித்தல், அடையாள அட்டை பரிசோதித்து அடையாள உறுதிப்படுத்தல் போன்ற பொலிஸாரின் அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முப்படையினருக்கு வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. இதன் மூலம் முப்படையினருக்கு இருந்த பொலிஸ் அதிகாரங்கள் இரத்தானது. இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி வழமையான சட்டத்தின் மூலம் பொது அமைதி குலையும் விசேடமான சந்தர்ப்பங்களில் இராணுவத்தை அழைக்க முயற்சித்தார்.
மகிந்த ராஜபக்ச செய்ததையே மைத்திரிபால செய்துள்ளார். தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கியுள்ளார் எனவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 9வது திருத்தம் ரணில் – மைத்திரி உடன்பாடு: முன்னிலை சோசலிசக் கட்சி
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» புதிய அரசாங்கத்திடம் நீதி வேண்டி முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம்
» முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» புதிய அரசாங்கத்திடம் நீதி வேண்டி முன்னிலை சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum