Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Go down

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் Empty யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Post by oviya Fri Feb 06, 2015 1:18 pm

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் கடத்தல்களால் காணாமல் போகச்செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தரக் கோரியும்,

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாகி இருக்கும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தை நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனோருக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டம் எதிர்வரும் 9ம் நாள் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ்நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

கடந்த காலத்தில் பெரும்போர்களின் போதும் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் முடிந்த வகை தொகையற்ற மானுடக்கொலைகள், நடைபெற்ற போரின்போதும் அதன் பின்பும் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை இழந்து தேடி அலைந்து அவர்களின் பெற்றோர்களும் மனைவி மற்றும் உறவுகளும் எதுவித பயனுமற்று கண்ணீருடன் ஏக்கத்துடன் இன்றும் வாழ்கின்றனர்.

இந்தநிலையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமும் அந்த ஆட்சியாளர்களின் நூறு நாள் வேலைதிட்டமும் தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருமென ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாண சபை மற்றும் நகர பிரதேச சபை உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக பெருமக்கள். சமூகத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுசன அபிமானமுள்ள சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்களென திரண்டு குரல் கொடுக்க வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு மிக நேசமுடன் அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை 9 மணிக்கு யாழ் பஸ்நிலையம் முன்பாக பழைய காலை 9மணிக்கு இந்த கவனயீர்ப்பு நடைபெற்று அமைதிப் பேரணியாக யாழ் வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ்ப்பாணம் கச்சேரியில் ஜனாதிபதிக்கான மகஜர் யாழ் அரச அதிபரிடம் கையளிக்கப்படுமென வடக்கு கிழக்கு மாகாண காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum