Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது

Go down

பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது Empty பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது

Post by oviya Wed Feb 04, 2015 1:39 pm

சென்னையில் பேஸ்புக் போலி கணக்கின் மூலம் மருத்துவர் என ஏமாற்றி பல பெண்களை பலாத்காரம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர், தன் வீட்டில் இருந்த 10 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடியதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நடந்த விசாரணையில், வழக்கறிஞரின் மகள் பேஸ்புக்கில் பழகிய ரகமத்துல்லா(27) என்பவனிடம் நகைகளை இழந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் பொலிசார் அவனது பேஸ்புக் கணக்கை சோதனையிட்டதில் ரகமத்துல்லா, தான் ஒரு மருத்துவர் என போலி தகவல்களை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

தனிப்படை பொலிசார் தொடர்ந்து அவனது பேஸ்புக் கணக்கை கண்காணித்ததில், அவனுடன் வேறொரு பெண் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

பொலிசார் அந்த பெண்ணின் உதவியுடன், ரகமத்துல்லாவை கைது செய்து விசாரித்ததில் அவன் விழுப்புரம் மாவட்டம், கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்த அசன் அலி என்பவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது

மேலும் பொலிசாரின் விசாரணையில், பேஸ்புக்கில் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்துகொண்டு, பல பெண்களிடம் பழகியதும் அவர்களை பலாத்காரம் செய்துமிரட்டி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்ததையும் தெரிவித்துள்ளான்.

தற்போது ரகமத்துல்லாவிடம் இருந்து 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்த பொலிசார், அவனை கைதுசெய்து குரோம்பேட்டை பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவனை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum