Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குரங்குகளுக்கு மது கொடுத்த நடிகர் மயில்சாமி?

Go down

குரங்குகளுக்கு மது கொடுத்த நடிகர் மயில்சாமி? Empty குரங்குகளுக்கு மது கொடுத்த நடிகர் மயில்சாமி?

Post by oviya Tue Feb 03, 2015 1:02 pm

திரைப்பட நடிகர் மயில்சாமி விழா ஒன்றில் குரங்குகளுக்கு மது ஊற்றியதாக பேசியதற்காக கால்நடை துயர்தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னையில், கடந்த மாதம் 26ம் திகதி நடைபெற்ற திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது பேசுகையில், குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்த போது சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலமாக மது அருந்த செய்து, குரங்கிற்கு மரம் ஏறுவதையே மறக்க செய்ததாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இந்த பேச்சு பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தபோது அதனை படித்த மதராஸ் கால்நடை துயர் தடுப்பு கழக (எஸ்.பி.சி.ஏ.) அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மயில்சாமியின் இந்த பேச்சு, பிராணி வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இதுதொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையின்போது நடிகர் மயில்சாமி அதிகாரிகளிடம் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், நகைச்சுவைக்காக, ஒரு நகைச்சுவை நடிகன் என்ற முறையில், பேச்சில் ஒரு ‘ஜனரஞ்சகம்’ இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவ்வாறு பேசினேன்.

ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடக்கவில்லை. பிராணிவதை தடுப்பு சட்டப்படி எந்த ஒரு தவறையும் செய்யவில்லை.

குரங்குகளுக்கு நகைச்சுவைக்காக மதுவை குடிக்க கொடுத்ததாக பேசியிருந்ததே பிராணி வகை தடுப்பு சட்டப்படி குற்றமாகும் என்று எனக்கு இப்போது தெரிய வருகிறது.

எனவே நான் மேற்கண்டவாறு பேசியது தவறு என்றும், அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.சி.ஏ. அதிகாரி தி.தியாகராஜன் இதுகுறித்து கூறுகையில், நடிகர் மயில்சாமியின் விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை இனி நகைச்சுவைக்காக கூட பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum