Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்

Go down

கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம் Empty கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்

Post by oviya Fri Jan 30, 2015 1:11 pm

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 13வது சரத்தை இலங்கை மத்திய அரசில் முழுமையாக அமுல்நடாத்தவிருக்கும் அதாவது, அதிகாரங்களை பங்கிடவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியாளர்களாக த.தே..கூட்டமைப்பு மாற வேண்டும் என மாகாணசபை இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:

கிழக்குவாழ் தமிழ் மக்கள் அண்மைக்கால நகர்வுகளை மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு அடி சறுக்கினாலகூட பின்னர் அவர்களை கூட்டிணைக்க முடியாமல் போய்விடும். கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் சென்று மக்களின் உணர்வலைகளை சுவாசித்தபோது அவர்கள் கிழக்குமாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் வருவதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணமுள்ளார்கள்.

மக்களின் உணர்வுகளை அபிலாசைகளை மதியாமல் நாம் அரசியல் நடாத்தமுடியாது.

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதென்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இதனை யாரும் விட்டுத்தர வேண்டிய அவசியமில்லை. இது தமிழ்மக்களின் உரிமையேயன்றி சலுகையல்ல.

இதில் இனரீதியாக கணக்குப் போட்டுப்பார்ப்போரும் உள்ளனர். கடந்தஅரசோடு செய்த உடன்படிக்கை கடந்தஅரசோடு முடிவடைந்துவிட்டது.அதனை இன்னமும் பேசிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை.அதுகாலாவதியாகிவிட்டது.

இது விடயத்தில் தமிழ்த் தலைமைகள் துரதிருஸ்டியோடு நடந்து கொள்ளவேண்டும். தவறினால் அடுத்துவரும் இரண்டரை வருட காலத்திற்கு கிழக்குத் தமிழர்களை நட்டாற்றில் விட்டதற்கு சமனாகிவிடும்.எனவே தமிழ்முதலமைச்சர் என்பதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை.

ஆளும் அரசு இதற்கு பச்சைக் கொடிகாட்ட வேண்டும். இன்றேல் மத்தியஅரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகநேரிடும்.

இன்றேல் கலைத்துவிட்டு தேர்தலை நடாத்துங்கள். பலப்பரீட்சையில் இறங்குவோம் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum