Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு

Go down

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு Empty இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு

Post by oviya Fri Jan 30, 2015 1:04 pm

இலங்கையின் புதிய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கண்காணிப்பகம், நேற்று நியூயோர்க்கில் வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

656 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் முன்னைய இலங்கை அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அனைத்துவித மனித உரிமைமீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என்று கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கென்னத் ரொத் வலியுறுத்தியுள்ளார்.

தமது அறிக்கை தயார்ப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த அரசாங்கம் எடுத்துள்ள சில நடவடிக்கைகள், காத்திரமானவையாகும் என்று கண்காணிப்பகம் குறி;ப்பிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை மீண்டும் இயங்கச் செய்தமை, 2009இல் கொல்லப்பட்ட செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கின்றமை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன.

இதற்கிடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஐக்கிய நாடுகளால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அந்த விசாரணைகளை இலங்கையின் முன்னாள் அரசாங்கம் முற்றாக நிராகரித்து வந்தது.

இதேவேளை போருக்கு பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றங்களின்போது தமிழர்களின் நிலங்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் ராஜபக்சவின் அரசாங்கம் செயற்பட்டதாகவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டிள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum