Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன்

Go down

மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன் Empty மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன்

Post by oviya Sat Jan 24, 2015 2:29 pm

ஓசூர் பகுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், திருமண மண்டபத்திலேயே மணப்பெண்ணின் காதல் அம்பலமாகியுள்ளது.
ஓசூர், சூளகிரி அருகே கொரளதொட்டி பகுதியைச் சேர்ந்த சென்னப்பா மகள் அனிதா (20) என்பவருக்கும், சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருக்கும் சூளகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இரு வீட்டாரும் நேற்று முன்தினம்,திருமண மண்டபத்தில் திரண்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மணமகள் அறையை தட்டிய மர்ம நபர்கள் இருவரை மாப்பிள்ளை வீட்டார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கம்பி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரிய வந்தது.

இருவரையும் சூளகிரி பொலிசில் ஒப்படைத்தனர். இருவரும் மண்டபத்திற்கு திருட வந்திருக்கலாம் என பொலிசாரும், மணமகன் வீட்டாரும் நினைத்தனர்.

விசாரணையில், இருவரும் சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்த அப்பையா மகன் குமார், ஓசூர் அடுத்த நாகமலை பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவன் மகன் முருகேசன் என்பது தெரிய வந்தது.

இருவரும், மாதேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க மணமகளை கடத்திச் செல்ல வந்தது தெரிந்து பொலிசாரும், மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 6:45 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்ற மாதேஷ், என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மணப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

அனிதாவின் உறவினர்கள் மாதேஷை அடித்து வெளியேற்றினர். அப்போது, மறைத்து வைத்திருந்த விஷத்தை மாதேஷ் குடித்தார். இவரை பொலிசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சூளகிரி அடுத்த திருமலைகோட்டா பகுதியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில், மாதேஷ், அனிதா வேலை செய்த போது இருவரும் காதலித்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அனைத்தையும் அறிந்து கொண்ட மணமகன் ரமேஷ், கடைசியில் அத்தை மகள் திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum