Top posting users this month
No user |
Similar topics
அவமதிப்பதற்கும் அளவில்லையா? ஷங்கருக்கு திருநங்கை பகிரங்க கடிதம்
Page 1 of 1
அவமதிப்பதற்கும் அளவில்லையா? ஷங்கருக்கு திருநங்கை பகிரங்க கடிதம்
ஐ படம் குறித்து இயக்குநர் ஷங்கருக்கு திருநங்கை ஒருவர் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த ஐ படம், திருநங்கைகளை தவறாக சித்திரித்தாக கூறி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
மேலும் ஷங்கரின் போஸ்டரை செருப்பால் அடிப்பது, விக்ரம்- சந்தானத்திற்கு எதிராக கோஷமிடுவது போன்ற செயல்களில் திருநங்கைகள் சமீபத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஐ படத்தை பார்த்த லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை, இயக்குநர் ஷங்கருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, படத்தின் நாயகன் விக்ரம் வில்லனைப் பார்த்து முதல் பத்து நிமிடங்களிலேயே “டே… பொட்ட…” என்கிறார்.
நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றுக்கு நன்கு பழகியிருக்கிறோம்.
‘பொட்டை’ என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்துக்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம்?
உள்ளம் முழுவதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம் பாலினத்துக்கு நேர்மையாக இருக்கிறோம். திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவரத் துணிகிறோம்.
பெற்றோர்களின் சொத்து, சுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை எவரையும் சாராமல் வாழ்கிறோம்.
தெருவிலும், வெள்ளித் திரையிலும் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் பராக்கிரமம் சிறந்ததா? அல்லது ‘பொட்டைகள்’ சோற்றில் உப்பு போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் எண்ணமா?
வித்தியாசமான வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாகத் திருநங்கையை வைத்ததையும், அதுவும் உலக அழகியையே மேலும் அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜானியையே(கதாபாத்திரப் பெயர் ஓஸ்மா ஜாஸ்மின்) நடிக்க வைத்ததையும் பாராட்டலாம்.
ஆனால் தான் வியக்கும், விரும்பும் விளம்பர அழகியின் வாயாலேயே ‘இந்தியாவிலேயே முன்னணி ஸ்டைலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், முதல் பார்வையிலேயே ஓஜாஸ் மீது நாயகன் விக்ரமுக்கும், நண்பர் சந்தானத்துக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?
தன்னை முகத்துக்கு நேராகத் தன்னை அவமானப்படுத்தும் ஒருவனை ஒரு திருநங்கை விடாமல் மோகம் கொள்வாள் என எப்படி நினைத்தீர்கள்?
பிச்சையெடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் நேர்ந்துவிடப்பட்ட பிறவிகள் இவர்கள்.. இவர்களுக்குத் தன்மானமே இருக்காது என முடிவெடுத்துவிட்டீர்களா? அற்பமான இந்த தர்க்கங்கள் உங்கள் பிரம்மாண்டச் சிந்தனைக்கு வரவேயில்லை இல்லையா?
ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் நாயகனாலும், நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நியாயமா?
நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், நீங்கள் மலினப்படுத்துவதையும் கடந்து எங்கள் உலகத்துக்குள்ளும் உங்களில் பலருக்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். அதற்காக எங்கள் சோற்றில் உப்பில்லை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என எழுதியுள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த ஐ படம், திருநங்கைகளை தவறாக சித்திரித்தாக கூறி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
மேலும் ஷங்கரின் போஸ்டரை செருப்பால் அடிப்பது, விக்ரம்- சந்தானத்திற்கு எதிராக கோஷமிடுவது போன்ற செயல்களில் திருநங்கைகள் சமீபத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஐ படத்தை பார்த்த லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கை, இயக்குநர் ஷங்கருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, படத்தின் நாயகன் விக்ரம் வில்லனைப் பார்த்து முதல் பத்து நிமிடங்களிலேயே “டே… பொட்ட…” என்கிறார்.
நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றுக்கு நன்கு பழகியிருக்கிறோம்.
‘பொட்டை’ என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்துக்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம்?
உள்ளம் முழுவதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம் பாலினத்துக்கு நேர்மையாக இருக்கிறோம். திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவரத் துணிகிறோம்.
பெற்றோர்களின் சொத்து, சுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை எவரையும் சாராமல் வாழ்கிறோம்.
தெருவிலும், வெள்ளித் திரையிலும் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் பராக்கிரமம் சிறந்ததா? அல்லது ‘பொட்டைகள்’ சோற்றில் உப்பு போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் எண்ணமா?
வித்தியாசமான வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாகத் திருநங்கையை வைத்ததையும், அதுவும் உலக அழகியையே மேலும் அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜானியையே(கதாபாத்திரப் பெயர் ஓஸ்மா ஜாஸ்மின்) நடிக்க வைத்ததையும் பாராட்டலாம்.
ஆனால் தான் வியக்கும், விரும்பும் விளம்பர அழகியின் வாயாலேயே ‘இந்தியாவிலேயே முன்னணி ஸ்டைலிஸ்ட்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், முதல் பார்வையிலேயே ஓஜாஸ் மீது நாயகன் விக்ரமுக்கும், நண்பர் சந்தானத்துக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?
தன்னை முகத்துக்கு நேராகத் தன்னை அவமானப்படுத்தும் ஒருவனை ஒரு திருநங்கை விடாமல் மோகம் கொள்வாள் என எப்படி நினைத்தீர்கள்?
பிச்சையெடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் நேர்ந்துவிடப்பட்ட பிறவிகள் இவர்கள்.. இவர்களுக்குத் தன்மானமே இருக்காது என முடிவெடுத்துவிட்டீர்களா? அற்பமான இந்த தர்க்கங்கள் உங்கள் பிரம்மாண்டச் சிந்தனைக்கு வரவேயில்லை இல்லையா?
ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் நாயகனாலும், நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது. இது நியாயமா?
நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், நீங்கள் மலினப்படுத்துவதையும் கடந்து எங்கள் உலகத்துக்குள்ளும் உங்களில் பலருக்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். அதற்காக எங்கள் சோற்றில் உப்பில்லை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என எழுதியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
» ஷங்கரை வெளுத்து வாங்கும் திருநங்கை ஆயிஷா பாரூக்
» ஒரு விநாடி தாமதத்தால் தகர்ந்த முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவு
» ஷங்கரை வெளுத்து வாங்கும் திருநங்கை ஆயிஷா பாரூக்
» ஒரு விநாடி தாமதத்தால் தகர்ந்த முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum