Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல்

Go down

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல் Empty பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல்

Post by oviya Fri Jan 23, 2015 1:53 pm

மதுபோதை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது நீதவான் மூவரையும் தலா 2 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தத்துடன் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் பகுதியை சேர்ந்த குடும்பநல மருத்துவ மாது ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்படுகையில் வீட்டிற்கு அருகில் மது போதையில் நின்ற மூவர், அவர் தொடர்பாக அவதூறுகளை கூறியுள்ளனர்.

அதனை அடுத்து மருத்துவ மாதுவின் கண் பார்வையற்ற கணவர் அது தொடர்பில் மது போதையில் நின்றவர்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதனை அடுத்து போதையில் நின்ற மூவரும் கண்பார்வை அற்றவரை தாக்கியுள்ளனர். அங்கு கூடிய அயலவர்கள் போதையில் நின்றவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

தம் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது பொலிசார் அவர்களுடைய முறைப்பாட்டை ஏற்காமல் அசமந்த போக்காக இருந்தனர்.

குறித்த குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற விடயத்தை கேள்வியுற்ற தாக்குதல் மேற்கொண்ட மூவரும் மேலும் 10 பேருடன் பொலிஸ் நிலையதிற்கு வந்து பொலிசார் முன்னிலையில் தமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் குடும்பத்தையே வெட்டுவோம் என மிரட்டியுள்ளனர்.

அதையடுத்து பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் தவிர ஏனையவர்களை பொலிஸ் நிலையத்தை விட்டு செல்லுமாறு கூறிய போது மூவரும் பொலிசாருடன் முரண்பட்டதுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்த கதிரை மேசைகளையும் தள்ளி வீழ்த்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அதனை தடுக்க சென்ற பொலிசார் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர். அதையடுத்து குறித்த மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.

மூவரும் கோப்பாய் பொலிசாருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருபவர்கள் எனவும் அதனாலையே அவர்கள் பொலிஸ் நிலையத்தினுள்ளே அட்டகாசம் புரிந்து பொலிசார் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனவும்.

அவர்கள் மீதான முறைப்பாட்டை ஒழுங்கான முறையில் பொலிசார் எழுதாமல் நீதிமன்றில் முற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum