Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை பற்றி கூறும் சம்பிக்க ரணவக்க

Go down

ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை பற்றி கூறும் சம்பிக்க ரணவக்க Empty ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை பற்றி கூறும் சம்பிக்க ரணவக்க

Post by oviya Thu Jan 22, 2015 1:35 pm

எனது தாய் மண், எனது பிள்ளைகளை நேசிக்கின்றேன் கூறிக்கொண்டிருந்த ராஜபக்ஷ அரசாங்கம் எப்படியான கொடூர ஆட்சியை முன்னெடுத்தது என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக மின் வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பெட்றோல் உட்பட எரிபொருட்களுக்காக அறவிடப்பட்ட வரி உட்பட அனைத்து பணமும் ராஜபக்ஷ குடும்பத்தின் பயங்கரமான ஊழலுக்கும் மோசடியான திட்டங்களுக்குமே சென்றுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் வரிகளை அறவிட்டன. செல்வந்த நிறுவனங்கள், சிகரட், மதுபானம் போன்ற தீங்கு விளைவிக்கும் வர்த்தகங்களிடம் இருந்து அந்த அரசாங்கங்கள் வரியை அறவிட்டன.

எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் அத்தியாவசிய உணவு பொருட்கள் போன்றவற்றில் இருந்தே வரிகளை அறவிட்டது. இதுவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிறப்பு.

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வெளிப்படையான விலை சூத்திரத்தை நாம் உருவாக்குவோம். அதேபோல் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரத்திற்கும் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்துவோம்.

வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கு இதன் போது விசேட நிவாரணத்தை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் கடந்த காலங்களில் எரிபொருளை கொள்வனவு செய்யாது தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி காட்டுகின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உட்பட புதிய அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணத்தை மக்களுக்கு வழங்குமாறு நான் எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம் தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum