Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசின் அவதூறு வழக்கில் சம்மனை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த்

Go down

அரசின் அவதூறு வழக்கில் சம்மனை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த் Empty அரசின் அவதூறு வழக்கில் சம்மனை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த்

Post by oviya Thu Jan 15, 2015 1:32 pm

தமிழக அரசு தன்மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் சென்னை செசன்சு நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யயப்பட்டது.
ஆவின் பால் கொள்முதல் நடவடிக்கையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 10-ந் திகதி அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், தமிழக அரசு குறித்து அவதூறான கருத்துகள் உள்ளதாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், அமைச்சர் பி.வி.ரமணா சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், விஜயகாந்த் தெரிவித்த கருத்தால் தனக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமணா சார்பில் கூறப்பட்டது.

வருகிற 21-ந் திகதி இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று செசன்சு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

விஜயகாந்த் அறிக்கையில் பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குறித்து தனிப்பட்ட முறையிலோ, அலுவலக செயல்பாடுகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று தான் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என்னும் நோக்கில் இதுபோன்ற அவதூறு வழக்குகளை தொடுக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் இதேபோன்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜெயலலலிதா தரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு பிறப்பித்துள்ளது.

அவருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த எல்லா அவதூறு வழக்குகளுக்கும் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

எனவே அவதூறு வழக்குகள் மீது உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் நிலையில் கீழ்நீதிமன்றங்கள் இதேபோன்ற வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள முடியாது.

ஆவின் நிறுவனத்தில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மனுதாரர் தன்னுடைய அறிக்கையில் அவதூறாக எதையும் கூறவில்லை என்பதும் உறுதியாகிறது.

எனவே அவதூறு சட்டங்களை நீக்கவும் விஜயகாந்துக்கு எதிராக சென்னை செசன்சு நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum