Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி.

Go down

ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி. Empty ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி.

Post by oviya Thu Jan 15, 2015 1:17 pm

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
லஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பல கோடி ரூபா பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பணத்தை கபடமான முறையில் அபகரித்து கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு அவற்றை மக்களின் நலனுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல்வேறு அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த ஊழல் பேர்வழிகளினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

ஊழல் மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக சிலர் அரசியால்வாதிகள் தற்போதைய ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனினும், ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி தொடர்ந்தும் வலியுறுத்தும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum