Top posting users this month
No user |
Similar topics
மௌனம் கலைத்து…புன்னகையோடு தித்திக்கும் பொங்கல் வாழ்த்து சொன்ன ஜெயலலிதா
Page 1 of 1
மௌனம் கலைத்து…புன்னகையோடு தித்திக்கும் பொங்கல் வாழ்த்து சொன்ன ஜெயலலிதா
தீபாவளி, புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி,
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் பொது "பொங்கல் பொங்கல்" என்று மகிழ்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமை உடையவர்கள் என்னும் பொருள் பட உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத் தோருக்கு உணர்த்தியுள்ளார்.
அத்தகைய சிறப்பு மிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.
அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று மனமார வாழ்த்தி, என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி,
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் பொது "பொங்கல் பொங்கல்" என்று மகிழ்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமை உடையவர்கள் என்னும் பொருள் பட உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத் தோருக்கு உணர்த்தியுள்ளார்.
அத்தகைய சிறப்பு மிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.
அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று மனமார வாழ்த்தி, என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா தான் எனது மதம்: மௌனம் கலைத்து உணர்ச்சி வசப்பட்ட மோடி
» ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பில் இந்தியா மௌனம்! அமெரிக்க யோசனையின் பின் மௌனம் கலையும்
» தித்திக்கும்... ரவா கேசரி
» ஹைபிரைட் நீதிமன்றம் தொடர்பில் இந்தியா மௌனம்! அமெரிக்க யோசனையின் பின் மௌனம் கலையும்
» தித்திக்கும்... ரவா கேசரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum