Top posting users this month
No user |
சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த மைத்திரி தரப்பு - சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
Page 1 of 1
சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த மைத்திரி தரப்பு - சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் கட்சி மாறலை ஏற்றுக்கொள்ள மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கியவரான சஜின்வாஸ், மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை நேற்று வெளியிட்டார்.
எனினும் அவர் மேற்கொண்டதாக கூறப்படும் பல்வேறு பாரிய ஊழல்கள் காரணமாக அவரை தமது தரப்பில் சேர்க்கக்கூடாது என்று மைத்திரிபால தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர்.
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் இயங்கி நஷ்டமடைந்த மிஹின் எயார் விமான நிறுவனத்துக்கு சஜின் வாஸே தலைவராக செயற்பட்டார்.
அத்துடன், அமெரிக்காவில் வைத்து பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை தாக்கிய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே துபாயில் உள்ள கிறேலைன் குழுமத்தில் பணியாற்றி வந்த வாஸ், மஹிந்த ராஜபக்ச அங்கு செல்லும் போது அவருடன் நட்பை வளர்த்துக்கொண்டார்.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில் அரசியலிலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலி, தெல்துவ என்ற இடத்தில் உள்ள வீட்டின் மீதே இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களின் தகவல்படி வீட்டின் மீது இனந்தெரியாதோர் நான்கு பெற்றோல் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கியவரான சஜின்வாஸ், மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை நேற்று வெளியிட்டார்.
எனினும் அவர் மேற்கொண்டதாக கூறப்படும் பல்வேறு பாரிய ஊழல்கள் காரணமாக அவரை தமது தரப்பில் சேர்க்கக்கூடாது என்று மைத்திரிபால தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர்.
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் இயங்கி நஷ்டமடைந்த மிஹின் எயார் விமான நிறுவனத்துக்கு சஜின் வாஸே தலைவராக செயற்பட்டார்.
அத்துடன், அமெரிக்காவில் வைத்து பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை தாக்கிய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே துபாயில் உள்ள கிறேலைன் குழுமத்தில் பணியாற்றி வந்த வாஸ், மஹிந்த ராஜபக்ச அங்கு செல்லும் போது அவருடன் நட்பை வளர்த்துக்கொண்டார்.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கையின் பேரில் அரசியலிலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலி, தெல்துவ என்ற இடத்தில் உள்ள வீட்டின் மீதே இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களின் தகவல்படி வீட்டின் மீது இனந்தெரியாதோர் நான்கு பெற்றோல் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum