Top posting users this month
No user |
கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!
Page 1 of 1
கொழும்பில் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த முன்னாள் கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சட்டவிரோத சுவரொட்;;;டிகளை அகற்றிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி முனையில் அச்சுத்தப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு டிபென்டர் ரக வாகனங்களில் ஒரு குழுவுடன் வந்த முன்னாள் உயர் கடற்படை அதிகாரி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து, மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றினால் சுட்டு விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
இந்த முன்னாள் உயர் கடற்படை அதிகாரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விசாரணைகளை கைவிடுமாறு பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் குறித்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த முன்னாள் கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சட்டவிரோத சுவரொட்;;;டிகளை அகற்றிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி முனையில் அச்சுத்தப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு டிபென்டர் ரக வாகனங்களில் ஒரு குழுவுடன் வந்த முன்னாள் உயர் கடற்படை அதிகாரி, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து, மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றினால் சுட்டு விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
இந்த முன்னாள் உயர் கடற்படை அதிகாரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த விசாரணைகளை கைவிடுமாறு பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் குறித்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum