Top posting users this month
No user |
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து நிவாரணம்
Page 1 of 1
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து நிவாரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் வட்டக்கச்சி இராமநாதன்புரம் மக்கள் ஒன்றியம் மற்றும் அவுஸ்திரேலியா கொடையாளிகள் இணைந்து இந்து இளைஞர் பேரவையினூடாக மனிதாபிமான உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதுடன், தொழில், விவசாயம் போன்றவை பாதிக்கப்பட்ட மக்களான வாகரைப் பிரதேசத்தில் உள்ள பனிச்சங்கேணி கிராம அதிகாரி பிரிவின் நடுக்குடியிருப்பு, கோயில் குடியிருப்பு, சல்லித்தீவு ஆகிய பகுதி மக்களுக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் மூலம் பாய் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக செவ்வாய்கிழமை வழங்கியது.
இப்பகுதியில் 705 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 458 குடும்பங்களுக்கு 916 ரூபாய்களை வழங்கி வைத்தனர். இதற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியத்தினால் 192,099 ரூபாய் நிதி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கியுள்ளது. அத்தோடு மேலும் உள்ள 253 குடும்பங்களுக்கு 916 ரூபாய்களை வழங்கி வைத்தனர்.
இதற்கு அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் 89,901 ரூபாய் நிதி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கியுள்ளது. இவ் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் பேரவை பிரதிநிதிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் பனிச்சங்கேணி கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய உணர்வு கொண்ட உறவுகளுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதுடன், தொழில், விவசாயம் போன்றவை பாதிக்கப்பட்ட மக்களான வாகரைப் பிரதேசத்தில் உள்ள பனிச்சங்கேணி கிராம அதிகாரி பிரிவின் நடுக்குடியிருப்பு, கோயில் குடியிருப்பு, சல்லித்தீவு ஆகிய பகுதி மக்களுக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் மூலம் பாய் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக செவ்வாய்கிழமை வழங்கியது.
இப்பகுதியில் 705 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 458 குடும்பங்களுக்கு 916 ரூபாய்களை வழங்கி வைத்தனர். இதற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியத்தினால் 192,099 ரூபாய் நிதி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கியுள்ளது. அத்தோடு மேலும் உள்ள 253 குடும்பங்களுக்கு 916 ரூபாய்களை வழங்கி வைத்தனர்.
இதற்கு அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் 89,901 ரூபாய் நிதி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கியுள்ளது. இவ் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் பேரவை பிரதிநிதிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் பனிச்சங்கேணி கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பிரான்ஸ் நாட்டில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய உணர்வு கொண்ட உறவுகளுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum