Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்டிய கணவன் வேண்டாம்….தோழிதான் வேண்டும்: தாலியை கழட்டிக் கொடுத்த மனைவி

Go down

கட்டிய கணவன் வேண்டாம்….தோழிதான் வேண்டும்: தாலியை கழட்டிக் கொடுத்த மனைவி Empty கட்டிய கணவன் வேண்டாம்….தோழிதான் வேண்டும்: தாலியை கழட்டிக் கொடுத்த மனைவி

Post by oviya Mon Jan 12, 2015 1:32 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியை ஒருவர் திருமணமான 9 நாட்களில் தாலியை கழட்டிக் கொடுத்துவிட்டு தோழியுடன் சென்றுள்ளார்.
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி ஆசிரியைக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த நபருக்கும் டிசம்பர் மாதம் 27ம் திகதி திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன், தாய் வீட்டுக்குப் போயிருந்தார்.

அங்கு விருந்தோம்பல் நடந்தது. அதன் பின்னர் 5ம் திகதி தாய் வீட்டில் இருந்து தான் பணியாற்றும் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவரது தாயார் மகளை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், இரணியல் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இரணியல் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கல்லூரி ஆசிரியை இரணியல் காவல் நிலையத்திற்கு சென்று, தனக்கு திருமண வாழ்க்கை பிடிக்காததால் தோழி வீட்டுக்கு சென்று இருந்ததாகவும் கணவருடன் வாழ விரும்பவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொலிசார் ஆசிரியையின் கணவர், தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து சமரச பேச்சு நடத்தினார்கள்.

அப்போதும் தனது முடிவில் ஆசிரியை பிடிவாதமாக இருந்தார். விருப்பம் இல்லாத மனைவியுடன் தானும் வாழ ஆசைப்படவில்லை என்றும் விவாகரத்து பெற தயார் எனவும் ஆசிரியையின் கணவர் கூறி விட்டார்.

இருப்பினும் மகளின் எதிர்காலம் கருதி, கணவருடன் போய் வாழ் என்று தாயாரும் பேசிப் பார்த்தார். ஆனால் அவர் எதற்குமே சம்மதிக்கவில்லை. எனக்கு தோழியே போதும், கணவருடன் வாழ விரும்பவில்லை என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் கோபமடைந்த அவரது தாயார், அப்படியானால், அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்து விடு என்று கூறினார். இதைக் கேட்ட அந்த ஆசிரியை, தனது தாலி உள்பட அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum