Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புலம்பெயர் மக்கள் நிவாரண உதவி!

Go down

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புலம்பெயர் மக்கள் நிவாரண உதவி! Empty கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புலம்பெயர் மக்கள் நிவாரண உதவி!

Post by oviya Mon Jan 12, 2015 1:15 pm

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை ஒழுங்குபடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனர்;த்த முகாமைத்துவ பிரிவு நேற்று பூநகரியின் கிராமங்களான கௌதாரி முனை மண்டித்தலை விநாசியோடை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பிரான்ஸ் வாழ் புலம் பெயர் தனிநபர்களின் உதவியை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூநகரி கிளையின் செயலாளர் செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கலந்து கொண்டவர்களின் மத்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துரைக்கும்போது,

கடந்த காலத்தில் அபிவிருத்தி பற்றி அதிகம் பேசப்பட்டு கிராமங்கள் எல்லாவற்றிலும் பூரணத்துவம் அடைந்துவிட்டதாக சொல்லப்பட்ட போதும் இங்கு இந்த கிராமங்களை பார்க்கும்போது அபிவிருத்தி என்ற போர்வைக்குள் ஏமாந்துபோன கிராமங்களை பார்க்க முடிகின்றது.

வீதிகள் வீட்டுத்திட்டம் கல்வி போக்குவரத்து என எல்லா அடிப்படை தேவைகளிலும் பின்தங்கி நிற்கும் இந்த கிராமங்கள் நகர்ப்புறத்தை அண்டிய கிராமங்களில் இருந்து மிக பின்தங்கி இருப்பதை காண முடிகின்றது.

நகரை அண்டிய இடங்களில் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட அபிவிருத்தி என்ற ஏமாற்று வித்தைகளை இந்தக் கிராமங்கள் அம்பலப்படுத்துகின்றன.

எனவே இனிவரும் காலங்களில் மாற்றங்களின் ஊடாக நமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய அபிவிருத்தி நோக்கி நாம் நகர நாம் முனைவோம் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum