Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வட கிழக்கில் இராணுவத்தை ஒழிக்க மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்- மாற்றத்திற்காகவே வாக்களித்னர்: ஜனா

Go down

வட கிழக்கில் இராணுவத்தை ஒழிக்க மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்- மாற்றத்திற்காகவே வாக்களித்னர்: ஜனா Empty வட கிழக்கில் இராணுவத்தை ஒழிக்க மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்- மாற்றத்திற்காகவே வாக்களித்னர்: ஜனா

Post by oviya Fri Jan 09, 2015 1:16 pm

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கு மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆட்சிமாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற காரணத்தினாலேயே மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீண்டகாலமாக ஆட்சியிலருந்து 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களை பெருந்தொகையாக படுகொலை செய்த மகிந்த அரசாங்கத்தை தண்டிக்கும் முகமாகவும் சர்வாதிகார ஆட்சியை ஒழிக்கும் முகமாகவும் மக்கள் இம்முறை வாக்களித்திருக்கின்றார்கள்.

எக்காலத்திலும் இல்லாதளவு இம்முறை பெருந்தொகையான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டதுடன் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நியாய பூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் எம்மிடம் முன்னைவத்துள்ளனர். எமது சமூகம் நீண்டகாலமாக இதற்காக பாடுபட்டிருக்கின்றார்கள். அதற்கான முடிவு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னாள் ஆயுதக்குழுக்கள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக பல அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள். அரசாங்கத்தில் பிரதியமைச்சராக முன்னாள் முதலமைச்சராக அமைச்சராக இருந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டு மக்களுக்கு பலவழிகளில் துன்பத்தை இழைத்திருக்கின்றார்கள். அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகள், கொலைகள், கடத்தல்கள் என்பவற்றுக்கு உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் பிரச்சார நடவடிக்கைகளின்போது தமிழ் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

யுத்தத்திற்கு முன்னும் பின்னும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மைத்திரி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். யுத்தக்குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கைதிகளாக சிறைகளில் இருக்கின்ற எமது உறவுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இவற்றையே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றுவார் என தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக நாங்கள் வாக்குகளை திரட்டுவதற்காக சென்றபோது எமது ஆதரவாளர்கள்இராணுவத்தினாலும் இராணுவ புலாய்வுப் பிரிவினராலும் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மகிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு இராணுவத்தினரும் இராணுவ புலாய்வுப் பிரிவினரும் மும்முரமாக செயற்பட்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்வதற்கு மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோருகின்றனர்.



மாற்றத்திற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்தனர் ஏமாற்றத்திற்கு அல்ல: ஜனா மா.உ

மாற்றத்திற்காகத் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தார்களே ஒழிய ஏமாற்றத்திற்காக அல்ல என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு தமிழப் பேசும் மக்கள் என்றும் எப்போதும் சவாலாக இருந்ததோ இருக்கப்போவதோ இல்லை. மாறாக சுயநல பதவி மோகம் கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செயற்பாடே தேசிய அரசியலில் இருந்து தமிழ்ப்பேசும் மக்களை ஒதுக்கி வைத்துள்ளது என்பதற்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பல தசாப்த காலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினை நாட்டில் புற்றுநோயாக புரையோடிப்போயுள்ளது என்பதை உணர்த்தும் அதன் தீவிரத்தன்மை உணர்த்தும் அதன் தீர்வு தொடர்பான அரசியல் உணர்த்தும் அதுபற்றி பேசுவதற்கோ ஏன் மூச்சு விடுவதற்கோ எத்தரப்பும் விரும்பாத அரசியல் போக்கே ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய காலங்களில் நாம் தென்னிலங்கையில் தெளிவாகக் கண்டோம்.

இருந்தும் இத்தேர்தல் பல விடயங்களை தெளிவாக உணர்த்தியுள்ளது. தேசிய அரசியலில் இருந்து சிறுபான்மை மக்களை ஒதுக்க நினைத்து அவர்களை இனவாதிகள், மதவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற கருத்தியலை தென்னிலங்கையில் விதைக்க நினைத்தவர்களுக்கு, நாம் தென்னிலங்கை அரசியல் போக்குடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்பதை .இந்த தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.

இதேபோன்று பிரிவினைவாதிகளதும் புலம்பெயர் தமிழர்களதும் முகவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தென்னிலங்கை மக்களிடம் காட்ட நினைத்தவர்களுக்கு, களநிலைமைகளின் யதார்த்தத்தை உணர்ந்து மாற்றத்துக்கான மைத்திரி நிர்வாகத்துக்கு தனது பங்களிப்பை வழங்கி இலங்கையில் உருவான புதிய அரசியல் கலாசாரத்துக்கு தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு தனது உண்மையான நேர்மையான சரியான பிம்பத்தை தென்னிலங்கைக்கு உணர்த்தியுள்ளது.

அம்மக்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை ஜனநாயக வழிமுறைக்குள் தீர்ப்பதை எமது அரசியல் இலக்கு என்பதையும் உணர்த்தியுள்ளது.

காலம் காலமாக எமது மண்ணையும் மக்களையும் அடக்கி ஒடுக்கி ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையில் வைத்திருந்த சத்திய ஆவேசத்தின் வெளிப்பாடாகவும் தமிழ் மக்களது வாக்களிப்பு முடிவினை நோக்கலாம்.
வடகிழக்கில் எம்மக்களது அபிலாசைகளுக்கு குறுக்காக தடையாக இருந்த மகிந்தவுக்கு ஆலவட்டம் பிடித்த முன்னாள் போராளிகள், ஆலோசகர்கள் அமைச்சர்கள் இன்னும் எங்கிருந்தோ இடையில் புகுந்து சிலகாலம் அட்டகாசம் புரிந்த ஒட்டுண்ணிகளுக்கும் பச்சோந்திகளுக்கும் கூட எம்மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான பாடம்புகட்டி, காறி உமிழ்ந்துள்ளனர்.

பறக்க நினைத்து இருந்ததை இழுத்து நிற்கும் மகிந்தவின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் புதிய ஜனாதிபதிக்கு இனப்பிரச்சினை தொடர்பான தனது அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள சரியான வழிகாட்டியாக இருக்கும். இருக்க வேண்டும் என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகள் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை அவசரத்தை நாட்டின் புதிய தலைமைக்கு எடுத்தியம்பியுள்ளதுடன் தேசிய, சர்வதேச எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது என்பதையும் எம்மக்களது முடிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது மைத்திரி நிர்வாகத்தில் அம்மாற்றம் எமக்கு சாதகமாக அமையும் என்று நம்புவோமாக. மாற்றத்திற்காகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தார்களேயொழிய ஏமாற்றத்திற்காக அல்ல.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum