Top posting users this month
No user |
அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் பொதுபல சேனா
Page 1 of 1
அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் பொதுபல சேனா
அமெரிக்க ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றறை நடத்த உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலாந்தி வித்தானகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது அமைப்பின் கௌரவத்தை குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கட்டுரைக்கு எதிராக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதுடன் நேரடியாக இந்த பிரச்சினையை அமெரிக்க அரசாங்கத்திடம் எழுப்ப உள்ளதாகவும் வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியதுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திகதியை குறிப்பிடவில்லை.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலை இலக்கு வைத்து இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக அமெரிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை இந்த கட்டுரை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் டிலாந்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வன்முறையான பௌத்தர்கள், பொதுபல சேனா உட்பட கடும் போக்கு பௌத்த குழுக்கள் பலமிக்க படைகளாக மாறியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தனது கருத்து பக்கத்தில் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
70 வீத பௌத்தர்களை கொண்ட இலங்கையில் இந்த அமைப்புகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
இதனை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமை நாட்டின் வரலாறுகளிலும் பிரதிபலித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த கடும் போக்கு பௌத்த அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது அமைப்பின் கௌரவத்தை குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கட்டுரைக்கு எதிராக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதுடன் நேரடியாக இந்த பிரச்சினையை அமெரிக்க அரசாங்கத்திடம் எழுப்ப உள்ளதாகவும் வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியதுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் திகதியை குறிப்பிடவில்லை.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலை இலக்கு வைத்து இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக அமெரிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை இந்த கட்டுரை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் டிலாந்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வன்முறையான பௌத்தர்கள், பொதுபல சேனா உட்பட கடும் போக்கு பௌத்த குழுக்கள் பலமிக்க படைகளாக மாறியுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தனது கருத்து பக்கத்தில் கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
70 வீத பௌத்தர்களை கொண்ட இலங்கையில் இந்த அமைப்புகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
இதனை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமை நாட்டின் வரலாறுகளிலும் பிரதிபலித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த கடும் போக்கு பௌத்த அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum