Top posting users this month
No user |
உடன்படிக்கைகள் இல்லை! வேலைத்திட்டம் மட்டுமே உள்ளது: மைத்திரிபால
Page 1 of 1
உடன்படிக்கைகள் இல்லை! வேலைத்திட்டம் மட்டுமே உள்ளது: மைத்திரிபால
எவருடனும் தனக்கு எந்த உடன்படிக்கைகளும் கிடையாது எனவும் வேலைத்திட்டம் மாத்திரமே இருப்பதாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டை பிரிக்க போவதாகவும் ஈழ பிரிவினை மீண்டும் தலைதூக்கும் எனவும் எனது அரசியல் எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.
ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பேன். ஜனாதிபதியாக தெரிவான பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நான் ஏற்பேன். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நான் உட்பட எமது அணியினர் வன்முறைகளுக்கு அனுசரணை வழங்காது அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 72 மணிநேரமே இருக்கின்றது. வன்முறையற்ற சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் எதிரணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொது வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டை பிரிக்க போவதாகவும் ஈழ பிரிவினை மீண்டும் தலைதூக்கும் எனவும் எனது அரசியல் எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.
ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பேன். ஜனாதிபதியாக தெரிவான பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நான் ஏற்பேன். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நான் உட்பட எமது அணியினர் வன்முறைகளுக்கு அனுசரணை வழங்காது அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 72 மணிநேரமே இருக்கின்றது. வன்முறையற்ற சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் எதிரணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொது வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum