Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னரே மக்கள் மைத்திரியை தீர்மானித்து விட்டனர்: பா.அரியநேத்திரன்

Go down

கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னரே மக்கள் மைத்திரியை தீர்மானித்து விட்டனர்: பா.அரியநேத்திரன் Empty கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னரே மக்கள் மைத்திரியை தீர்மானித்து விட்டனர்: பா.அரியநேத்திரன்

Post by oviya Mon Jan 05, 2015 1:03 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் முன்னரே வடகிழக்கு மக்கள் அவரை ஆதரிப்பதாக தீர்மானித்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமானது களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராசா, கருணாகரம், கிருஸ்ணபிள்ளை, துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை, மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் தொண்டர்கள் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

இந்த நாட்டிலே 1982ஆம் ஆண்டு முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 6 தடவைகள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது, 7வது தேர்தலை சந்திக்கின்றோம். இந்த நாட்டிலே 65 வருடகாலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக சமாதானத்திற்காக நிம்மதிக்காக பல முயற்சிகளை முன்னெடுத்தும் 6 தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை.

இரண்டு தடவைகள் ஆட்சில் இருந்த மகிந்த ராஜபக்ச மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தும் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காது அதனைத் தட்டிக்கழித்திருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அதனைச் செய்திருக்க முடியும். இவ்வாறான நிலையில் 7 வது தடவையாக ஜனாதிபதித் தேர்தல் வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார். எதிரணியில் சரத் பொன்சேகா போட்டியிட்டார்.

அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலதடவை ஆராய்ந்து சரத் பொன்சேகவை ஆதரிப்பது என இறுதி முடிவுக்கு வந்தது. அது என்னவெனில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்களும் சுமார் 40 ஆயிரம் மாவீரர்களையும் மண்ணில் படுகொலை செய்த அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கவே முன்வந்தோம்.

அந்த முடிவினை வடகிழக்கு மக்கள் தனித்துவமான இனத்தைச்சார்ந்தவர்கள் தனித்துவமான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்குப் பின்னால் வந்து வாக்களித்தார்கள்.

இதன் பின்னர் என்ன செய்தியைச் சொன்னது என்றால் தென்பகுதி மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து இருக்கு அதேவேளை வடகிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை என்ற செய்தியாகும்.

இதனால் மகிந்த அரசிடம் சர்வதேசம் சொன்னது யுத்தத்தினை வென்றீர்கள். சமாதானம் வந்துள்ளது என்கிறீர்கள் தமிழ் மக்களின் மனங்களை வென்றுள்ளதாக மார்பு தட்டிப் பேசுகின்றீர்கள் இவ்வாறான நிலையில் வடகிழக்கு மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்னும் செய்தியாக இருந்தது.

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழ்க் கூட்டமைப்பு பலதடவை கூடி ஆராய்ந்த போது மூன்று விதமான கருந்து வந்தது.

அதில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவரை வேட்பாளராக நிறுத்துதல், மற்றையது தேர்தலை பகிஸ்கரித்தல் இறுதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தல் ஆகிய முடிவுகளே சொல்லப்பட்டதே தவிர யாரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என கூறவில்லை.

வடகிழக்கு மக்களின் கருத்தும் இதுவாக இருந்தது. ஆதலால் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை கருத்துக்கேட்டு ஏகோபித்த முடிவாகவே எமது தலைமை இம்முடிவை எடுத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க முன்னரே வடகிழக்கு மக்கள் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக தீர்மானித்து விட்டார்கள்.

அதன் பின்னர் தான் நாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை அறிவித்து இருக்கின்றோம். இந்தத் தேர்தலில் வெளிப்படையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தமையால் தென்னிலங்கை மக்களிடையே இனவாதம் விதைக்கப்படலாம் என்ற கருத்துகளும் பலர் எங்களிடம் கூறியிருந்தார்கள்.

வெளிப்படையாக அறிவிக்காவிட்டால் இன்று சர்வதேச அரங்கில் எங்களது பிரச்சினை சென்றிருக்கிறது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி நின்றிருக்காது.

இந்த நேரத்தில் தேர்தலின் பின்னர் எமது பிரச்சனை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் போது இது எமக்கு சாதகமாக அமையும். அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை, முன்னாள் போராளிகள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத நிலை, வடகிழக்கில் எத்தனையோ கணவன்மார் கொலை செய்யப்பட்டமையால் பலர் விதவைகளாக இருக்கின்றார்கள்.

வடகிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுகிறது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு தமிழ் மக்களிடம் வாக்குக்கேட்டு வருகிறார். இந்த அட்டுழியங்களை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum