Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி

Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி Empty வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி

Post by oviya Sat Jan 03, 2015 1:10 pm

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம், லூசியம் சிவன் கோயில் மற்றும் லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ஆகியன உதவிகளை வழங்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச உதவி வழங்கும் முகமாக, லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயம் 4 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் நிதியை மட்டு. இந்து இளைஞன் பேரவைக்கு வழங்கியது.

இதில் 2000 ஸ்ரேலிங் பவுண் நிதி வெள்ள ஆரம்ப காலத்துப் பாதிப்பின் போது மக்களுக்க மிக அவசர உதவியாக வழங்கப்பட்டது.

மேலதிக 2000 ஸ்ரேலிங் பவுண் நிதியில் தற்போதுள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்ப மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 154 குடும்பங்களுக்கும் குருக்கள் மடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, தேயிலை, சோயாமீற் உட்பட்ட பொருட்கள் அதில் அடங்குகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பொருளாளர் ந.புவனசுந்தரம், செயலாளர் சா.மதிசுதன், மேலும் பேரவையின் பிரதிநிதிகள் இப்பொருட்களை வழங்கி வைத்தனர்.

இவ்வுதவியைப் புரிந்த கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு பேரவையும் பாதிக்கப்பட்ட மக்களும் நன்றி தெரிவிக்கின்றனர்.

லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கியது.

இந்த நிதியின் ஆரம்ப கட்டமாக திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட 55 குடும்பஙகளுக்கு போர்வை வழங்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum