Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை

Go down

ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை Empty ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை

Post by oviya Fri Jan 02, 2015 2:16 pm

திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிக்கும் நோக்கில் இறந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார். சாலை விபத்தொன்றில் படுகாயமடைந்த அஜீத்குமார் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி அஜீத்குமார் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏமாற்றி மருத்துவமனை நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோரிடம் கட்டச் சொல்லியுள்ளது. அவர்களும் அதன்படி பணம் கட்டியுள்ளனர்.

இதன்பின் திடீரென அஜீத்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்கு கொண்டு செல்லப்பட்ட அஜீத்குமார் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அஜீத்குமாரின் உறவினர்கள் இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைந்து தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum