Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனிதர்களுக்காக தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை: உச்ச நீதிமன்றம்

Go down

மனிதர்களுக்காக தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை: உச்ச நீதிமன்றம் Empty மனிதர்களுக்காக தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை: உச்ச நீதிமன்றம்

Post by oviya Thu Nov 19, 2015 12:38 pm

மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களைக் கொல்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்கள், மாநகராட்சி ஊழியர்களால் கொல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மிருகவதைச் சட்டத்துக்கு உள்பட்டு, தெரு நாய்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் கொன்றது சரிதான் எனத் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்திய விலங்கு நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாய்களைக் காட்டிலும் மனித உயிரே மேலானது.

மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களைக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

அதே நேரத்தில், மத்திய அரசின் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்-2001 விதிகளுக்கு உள்பட்டு மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களைக் கொல்லலாம்.

இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய்களின் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum