Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை: அனுரகுமார திஸாநாயக்க

Go down

ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை: அனுரகுமார திஸாநாயக்க Empty ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை: அனுரகுமார திஸாநாயக்க

Post by oviya Thu Jan 01, 2015 1:21 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாhநயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்துள்ளது. தமிழ் மக்கள் விலகியுள்ளதுடன் அவர்கள் மத்தியில் குரோதம் உருவாகியுள்ளது. ஈழப் புலி புலம்பெயர் தமிழர்கள் பற்றி ராஜபக்சவே பேசுகின்றார்.

தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு போர் உருவாக வேண்டும் என்ற நோக்கமே காணப்படுகின்றது. ஏகாதிபத்திய வெறியை இல்லாதொழிக்க வேண்டும்.

எதிர்வரும் 8ம் திகதி இந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாட்டை தற்போது ஜோதிடர்களே ஆட்சி செய்கின்றனர். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடிகளுக்கு விற்பனை செய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டினால் 2022ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்வார். ஒர் ஜனாதிபதி இவ்வளவு ஆண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டுமா இது என்ன கோமாளித்தனம் எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடையகின்றது என்றால் அது மக்களுக்கு உணரக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

இந்த நாடு பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வாதிகார பயணத்தை நிறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் அண்மையில் பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum