Top posting users this month
No user |
அரசாங்கம் வாக்குறுதியை மறந்து செயற்படுவதாக மாவை எம்.பி குற்றச்சாட்டு
Page 1 of 1
அரசாங்கம் வாக்குறுதியை மறந்து செயற்படுவதாக மாவை எம்.பி குற்றச்சாட்டு
அரசாங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த செப்படம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்ததாகவும் ஆனால் அதனை இதுவரையிலும் நடைமுறைபடுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவம், பொலிஸாருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் அதிகாரமளித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் சார்ந்த நெருக்கடிகள் உள்ளிட்டவை தீர்க்கப்படாமைக்கு பயங்கரவாத தடை சட்டமே இடையூராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தினை வலியுறுத்தியதாகவும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கிய உறுதிப்பாட்டுக்கமைய கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்ற விடயத்தை தெளிவுபடுத்தியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுநேர கடையடைப்பு போராட்டத்தின் மூலம் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், அதன் மூலமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே நேற்று மேற்கொண்ட பூரண ஹர்த்தால் போராட்டத்தில் இனம், மதம், மொழி கடந்து மக்கள் கலந்து கொண்டதாகவும் இந்த போராட்டம் பாரிய வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த செப்படம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்ததாகவும் ஆனால் அதனை இதுவரையிலும் நடைமுறைபடுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவம், பொலிஸாருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் அதிகாரமளித்துள்ளதாகவும், இதன் காரணமாகவே சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவி பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் சார்ந்த நெருக்கடிகள் உள்ளிட்டவை தீர்க்கப்படாமைக்கு பயங்கரவாத தடை சட்டமே இடையூராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தினை வலியுறுத்தியதாகவும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கிய உறுதிப்பாட்டுக்கமைய கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்ற விடயத்தை தெளிவுபடுத்தியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழுநேர கடையடைப்பு போராட்டத்தின் மூலம் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், அதன் மூலமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே நேற்று மேற்கொண்ட பூரண ஹர்த்தால் போராட்டத்தில் இனம், மதம், மொழி கடந்து மக்கள் கலந்து கொண்டதாகவும் இந்த போராட்டம் பாரிய வெற்றியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum