Top posting users this month
No user |
Similar topics
குரானை சுய நலத்துடன் பயன்படுத்தும் இஸ்லாமிய ஆண்கள்: உயர் நீதிமன்றம்
Page 1 of 1
குரானை சுய நலத்துடன் பயன்படுத்தும் இஸ்லாமிய ஆண்கள்: உயர் நீதிமன்றம்
குரான் கூறும் வழிமுறைகளை இஸ்லாமிய ஆண்கள் சுய நலத்துடன் பயன்படுத்துகின்றனர் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் தன் கணவர் ஜபார் அலி மெர்ச்சன்ட் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனது கணவர் தன்னை திருமணம் செய்த பின்னர், தனக்கு தெரியாமலும் தனது அனுமதியின்றியும் மேலும் இரு பெண்களை திருமணம் செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரையடுத்து ஜபார் அலி மெர்ச்சன்ட் மீது இந்திய தண்டனைச்சட்டம் 494ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி பர்டிவாலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது நீதிமன்றத்தில் பேசிய ஜாபர் அலி, இஸ்லாமிய திருமணச் சட்டம் பலதார மணத்தை அனுமதிக்கிறது.
இஸ்லாமியர் ஒருவர் 4 மனைவிகளை திருமணம் முடிக்க முஸ்லிம் திருமணச் சட்டத்தில் இடம் இருக்கிறது.
அதனால் தன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494ன் கீழ் வழக்கு பதிவு செய்தது தவறானது என்று தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, குரான் பலதாரப்பட்ட மணத்தை அனுமதிப்பது நேர்மையான விஷயங்களுக்காக மட்டுமே.
ஆனால் அதனை இஸ்லாமிய ஆண்கள் சுய நலத்துடன் பயன்படுத்துகின்றனர்.
முஸ்லிம் திருமணச் சட்டம் மனைவியை அடிமையாக நடத்த சொல்லவில்லை.
நான்கு மனைவிகளை திருமணம் செய்வது, இஸ்லாமியர்கள் அடிப்படை உரிமை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதையெல்லாம் தடுக்கும் வகையில் இந்த நாட்டில் சட்டம் இல்லை. நாட்டில் அனைவருக்கும் பொதுவான திருமணச் சட்டமும் இல்லை.
தற்போது நவீன காலத்திற்கேற்ப பொதுவான திருமணச் சட்டம் குறித்து நாட்டில் யோசிக்க வேண்டும்.
மனைவியின் விருப்பமின்றி 'தலாக்' சொல்வது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.
இந்திய அரசியல் அமைப்பின் படி, இருபாலாரும் பொதுவாக நடத்தப்பட வேண்டும்.
எனவே, ஜாபர் அலி மெர்ச்சன்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494ன் கீழ் வழக்குபதிவு செய்தது சரியே என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்குபெற திருநங்கைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
» புகார் சொன்னால் ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள்..பயந்து கொண்டு வீட்டுக்குள் அடங்கும் பெண்கள்!
» குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்
» புகார் சொன்னால் ஜட்டியுடன் குளிக்கும் ஆண்கள்..பயந்து கொண்டு வீட்டுக்குள் அடங்கும் பெண்கள்!
» குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum