Top posting users this month
No user |
மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன்
Page 1 of 1
மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், “என் பாட்டில் குற்றமில்லை, மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்” என பேசியுள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளர் கோவன் (51) "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை பாடி அரசை விமர்சித்தார்.
அந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்மீது தேசத்துரோக வழக்கு மற்றும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, குற்றம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவனை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தியுள்ளனர்.
பொலிசார், அவரை பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அப்போது பேசிய கோவன், பொலிசார் என்னை முழுமையாக விசாரித்து விட்டனர் என தெரிவித்துள்ளார்.
எனவே, கோவனை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் கோவன் பேசுகையில், ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம், நூறு ரூபாய்க்கு பருப்பு, லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன்.
இன்னும் பாடவேண்டியவை நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை, மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன் என பேசியுள்ளார்.
இதையடுத்து அவரை மீண்டும் புழல் சிறையில் பொலிசார் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளர் கோவன் (51) "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை பாடி அரசை விமர்சித்தார்.
அந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்மீது தேசத்துரோக வழக்கு மற்றும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, குற்றம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவனை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தியுள்ளனர்.
பொலிசார், அவரை பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அப்போது பேசிய கோவன், பொலிசார் என்னை முழுமையாக விசாரித்து விட்டனர் என தெரிவித்துள்ளார்.
எனவே, கோவனை பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் கோவன் பேசுகையில், ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம், நூறு ரூபாய்க்கு பருப்பு, லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன்.
இன்னும் பாடவேண்டியவை நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை, மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன் என பேசியுள்ளார்.
இதையடுத்து அவரை மீண்டும் புழல் சிறையில் பொலிசார் அடைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum