Top posting users this month
No user |
Similar topics
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கைப் பறிகொடுத்த மஹிந்த அரசாங்கம்!
Page 1 of 1
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கைப் பறிகொடுத்த மஹிந்த அரசாங்கம்!
எதிர்வரும் நாட்களில் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், இந்த அபாய நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கையில் சென்றடைந்துள்ளது. தற்போது முஸ்லிம் காங்கிரசின் ஊடாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரமும் விரைவில் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளன.
எனினும் ஆளுங்கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையிலும் எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய தேசியக்கட்சி 26 ஆசனங்களையும் ஆளுங்கட்சி 10 ஆசனங்களையும் மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், இந்த அபாய நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண சபைக்கான அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கையில் சென்றடைந்துள்ளது. தற்போது முஸ்லிம் காங்கிரசின் ஊடாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரமும் விரைவில் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளன.
எனினும் ஆளுங்கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையிலும் எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய தேசியக்கட்சி 26 ஆசனங்களையும் ஆளுங்கட்சி 10 ஆசனங்களையும் மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய
» வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைக்கவில்லை!– டிலான் பெரேரா ஆதங்கம்
» வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி
» வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைக்கவில்லை!– டிலான் பெரேரா ஆதங்கம்
» வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum