Top posting users this month
No user |
கொழும்பில் குற்றவாளிகளின் தகவல்களை திரட்ட நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
கொழும்பில் குற்றவாளிகளின் தகவல்களை திரட்ட நீதிமன்றம் அனுமதி
கொழும்பு நகரில் குற்றவாளிகளாக பதிவாகியுள்ள 254 பேரிடமிருந்து புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்வதற்காக அவர்களை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பிரசன்னமாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டில் குற்றவாளிகளாக பதிவாகியுள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் கடந்த 10 வருடங்களாக திரட்டப்படாமையினால், அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளிகளாக பதிவாகியுள்ளவர்களின் புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் பதிவாளர் அலுவலகத்தின் புகைப்பட கலைஞர்களினால் எடுக்கப்படும் என கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றவாளிகளாக பதிவாகி, ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாராஹேன்பிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 254 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னமாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் குற்றவாளிகளாக பதிவாகியுள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் கடந்த 10 வருடங்களாக திரட்டப்படாமையினால், அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றவாளிகளாக பதிவாகியுள்ளவர்களின் புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் பதிவாளர் அலுவலகத்தின் புகைப்பட கலைஞர்களினால் எடுக்கப்படும் என கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றவாளிகளாக பதிவாகி, ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாராஹேன்பிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 254 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரசன்னமாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum