Top posting users this month
No user |
Similar topics
இந்தியா வந்த எங்களது மகளே வருக: வழி தவறி பாகிஸ்தான் சென்ற இளம்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
Page 1 of 1
இந்தியா வந்த எங்களது மகளே வருக: வழி தவறி பாகிஸ்தான் சென்ற இளம்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
இந்தியாவில் இருந்து வழி தவறி ரயில் மூலம் பாகிஸ்தான் சென்ற கீதா இன்று காலை இந்தியா திரும்பியுள்ளார்.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம் பெண் கீதா தனக்கு 7 வயதாக இருந்த போது, சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது, வழி தவறி பாகிஸ்தானின் லாஹூருக்கு சென்றுவிட்டார்.
அங்குள்ள தன்னார்வ அமைப்பு கீதாவுக்கு தேவையான உதவிகளை செய்துவந்த நிலையில், இந்த தகவல் இந்திய அரசுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை மீட்டு, அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டுள்ளார்.
பின்னர் கீதா தன் பெற்றோர்களை அடையாளம் காட்டியதால், கீதாவை அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
மேலும், கீதாவிடமும் அவர் அடையாளம் காட்டியவர்களிடமும் மரபணு சோதனை நடத்தி, அவர்கள்தான் உண்மையான பெற்றோர் என்று கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை, பிஹார் குடும்பத்தினருடன் கீதாவின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்றால் கீதாவை ஒப்படைப்பதற்காக இரண்டு தொண்டு நிறுவனங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை இளம்பெண் கீதா, பாகிஸ்தானில் இருந்து டெல்லி விமான நிலைம் வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு மகள் வீடு திரும்பிவிட்டாள். எதி அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கீதா டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா வந்த எங்களது மகளே வருக என்று டிவிட்டரில் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
மேலும், கீதா இந்திய பிரஜ்ஜை என்பதை உறுதி செய்ய எந்த ஆவணமும் இல்லாததால் அவருக்கு இந்திய அரசியல் சாசன பிரிவு 13-ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாய் பேச முடியாத, காது கேளாத இளம் பெண் கீதா தனக்கு 7 வயதாக இருந்த போது, சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது, வழி தவறி பாகிஸ்தானின் லாஹூருக்கு சென்றுவிட்டார்.
அங்குள்ள தன்னார்வ அமைப்பு கீதாவுக்கு தேவையான உதவிகளை செய்துவந்த நிலையில், இந்த தகவல் இந்திய அரசுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை மீட்டு, அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டுள்ளார்.
பின்னர் கீதா தன் பெற்றோர்களை அடையாளம் காட்டியதால், கீதாவை அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
மேலும், கீதாவிடமும் அவர் அடையாளம் காட்டியவர்களிடமும் மரபணு சோதனை நடத்தி, அவர்கள்தான் உண்மையான பெற்றோர் என்று கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை, பிஹார் குடும்பத்தினருடன் கீதாவின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்றால் கீதாவை ஒப்படைப்பதற்காக இரண்டு தொண்டு நிறுவனங்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை இளம்பெண் கீதா, பாகிஸ்தானில் இருந்து டெல்லி விமான நிலைம் வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு மகள் வீடு திரும்பிவிட்டாள். எதி அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கீதா டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தியா வந்த எங்களது மகளே வருக என்று டிவிட்டரில் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
மேலும், கீதா இந்திய பிரஜ்ஜை என்பதை உறுதி செய்ய எந்த ஆவணமும் இல்லாததால் அவருக்கு இந்திய அரசியல் சாசன பிரிவு 13-ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா வந்த எங்களது மகளே வருக: வழி தவறி பாகிஸ்தான் சென்ற இளம்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு
» வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
» ஆப்கன் தீவிரவாதிகள் பிடியில் இருந்த தமிழக பாதிரியார் விடுதலை: உற்சாக வரவேற்பு
» வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
» ஆப்கன் தீவிரவாதிகள் பிடியில் இருந்த தமிழக பாதிரியார் விடுதலை: உற்சாக வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum