Top posting users this month
No user |
மட்டக்களப்பில் யானைத் தாக்குதல்! குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்
Page 1 of 1
மட்டக்களப்பில் யானைத் தாக்குதல்! குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்
மட்டக்களப்பில் யானைத் தாக்குதலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில், நேற்று காண்டுயானையின் தாக்குதலால் வீடொன்று சேதமடைந்துள்ளது.
கணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு அருகாமையில் யானையின் நடமாட்டத்தினை அவதானித்த நிலையில் வீட்டை விட்டு சடுதியாக வெளியேறியுள்ளனர்.
இதன் பின்னர் யானை வீட்டின் சுவாமி அறையினை முற்றாக சேதமாக்கி சென்றுள்ளதாகவும், அவதானக் குறைவாக இருந்திருந்தால் நாம் இரண்டு பேரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டிருக்கும் என்றார் வீட்டு உரிமையாளர்.
வீட்டின் சுவாமி அறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை காரணமாக இருப்பிடத்திற்கான வசதிகளை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அறிவித்துள்ளதாக கிரம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில், நேற்று காண்டுயானையின் தாக்குதலால் வீடொன்று சேதமடைந்துள்ளது.
கணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு அருகாமையில் யானையின் நடமாட்டத்தினை அவதானித்த நிலையில் வீட்டை விட்டு சடுதியாக வெளியேறியுள்ளனர்.
இதன் பின்னர் யானை வீட்டின் சுவாமி அறையினை முற்றாக சேதமாக்கி சென்றுள்ளதாகவும், அவதானக் குறைவாக இருந்திருந்தால் நாம் இரண்டு பேரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டிருக்கும் என்றார் வீட்டு உரிமையாளர்.
வீட்டின் சுவாமி அறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை காரணமாக இருப்பிடத்திற்கான வசதிகளை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அறிவித்துள்ளதாக கிரம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum