Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு

Go down

நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு Empty நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு

Post by oviya Sun Oct 18, 2015 1:36 pm

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் சரத்குமார் அணியினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில், நடிகர் விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனால் வாக்குப்பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்க அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டு பதிவாகிவிட்டதாக கூறப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

விஷால் கூறுகையில், என்மீது சம்பந்தமே இல்லாத சினிமாவில் இல்லாத வெளி ஆள் ஒருவர் தான் என்னை தாக்கினார் என்று கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு கூறுகையில், விஷால் அணி வெற்றி பெரும் தருவாயில் இருப்பதால் அசாதாரண சூழலை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

சரத்குமார் இதுபற்றி கூறுகையில், நடிகர் சங்க தேர்தல் காலை முதல் நல்ல முறையில் நடந்து வந்தது.

நடிகை சங்கீதா, வாக்கு மையத்தில் அனுமதி இல்லாத இடத்தில் சென்று உறுப்பினர்களிடம் வாக்கு சேகரித்து வந்தார்.

அதை தட்டி கேட்டவர்களை அவர் தரக்குறைவாக பேசியபோது அங்கு சிறிய வாக்குவாதம் மட்டுமே நடந்தது.

விஷால் மட்டுமல்ல யாரையும் தாக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தகராறில் ஈடுபட்டால் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து:

தகராறில் ஈடுபட்டால் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படும் என தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் எச்சரித்துள்ளார்.

முதல் இணைப்பு:

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்தும், இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கானத் தேர்தல் இன்று கலைமுதல் நடைபெற்று வருகிறது.

காலை 7.50 மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்துவிட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், இரண்டு வேண்டுகோள்களை முன் வைத்துள்ளார்.

ரஜினி பேசுகையில், இந்த தேர்தலில் வெற்றிப்பெறப்போகும் அணிக்கு எனது வாழ்த்துகள்.

மற்றும் என்னுடைய இரண்டு கோரிக்கைகள்: 1. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும்

2. கொடுத்த வாக்கினை மறவாமல் நிறைவேற்றுங்கள். முடியவில்லையென்றால் உடனே ராஜினாமா செய்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் நடிகர் கமல், நடிகை கவுதமியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசிய கமலஹாசன், பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பின் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum