Top posting users this month
No user |
டெல்லியில் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக்க முடியாது: மத்திய அரசு
Page 1 of 1
டெல்லியில் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக்க முடியாது: மத்திய அரசு
அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை ’தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு’ மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த வீட்டை அவரது நினைவில்லமாக மாற்ற வேண்டும் என கலாமின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், அதற்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், இந்திய தலைநகர் டெல்லியில் எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை.
எனவே கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 31ம் திகதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், கலாமின் பொருட்களை ராமேஸ்வரம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையமாக அமைக்க வேண்டும் என அவரது பேரன்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதம் கொடுத்திருந்தனர்.
கலாமின் பேரன் ஷேக் தாவூத் அப்போது கூறுகையில், கலாம் வாழ்ந்து மறைந்த இந்த வீட்டினை அவரது நினைவாக, ‘தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையம்’ அமைக்க வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த வீட்டை அவரது நினைவில்லமாக மாற்ற வேண்டும் என கலாமின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், அதற்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், இந்திய தலைநகர் டெல்லியில் எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை.
எனவே கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 31ம் திகதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், கலாமின் பொருட்களை ராமேஸ்வரம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையமாக அமைக்க வேண்டும் என அவரது பேரன்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதம் கொடுத்திருந்தனர்.
கலாமின் பேரன் ஷேக் தாவூத் அப்போது கூறுகையில், கலாம் வாழ்ந்து மறைந்த இந்த வீட்டினை அவரது நினைவாக, ‘தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையம்’ அமைக்க வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum