Top posting users this month
No user |
நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம்
Page 1 of 1
நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம்
உலக வங்கியிடம் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை விட 4 மடங்கு கடனை பெற அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.
இரண்டு வீத வட்டியில் மூன்று நிறுவனங்களில் இந்த கடன் பெறப்படவுள்ளது.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி ஆகியவற்றிடம் இந்த கடன் பெறப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெற்ற உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இந்த நிறுவனங்கள் மேற்படி கடனுதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடனை பெற்றுக்கொள்வதில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதுடன் 40 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாவை கடனாக பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.
இரண்டு வீத வட்டியில் மூன்று நிறுவனங்களில் இந்த கடன் பெறப்படவுள்ளது.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி ஆகியவற்றிடம் இந்த கடன் பெறப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெற்ற உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் இந்த நிறுவனங்கள் மேற்படி கடனுதவியை வழங்க இணங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடனை பெற்றுக்கொள்வதில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதுடன் 40 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum