Top posting users this month
No user |
கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன்: யுவராஜ் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன்: யுவராஜ் பரபரப்பு வாக்குமூலம்
சிபிசிஐடி பொலிசாரிடம் கோகுல்ராஜை நான் தான் கொலை செய்தேன் என்று யுவராஜ் ஒப்பு கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி, ஏடிஎஸ்பி ஸ்டாலின் ஆகியோர் நடத்திய விசாரணையில், கோகுல்ராஜை தான் கொலை செய்ததாக யுவராஜ் ஒப்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து தான், இன்று அதிகாலை யுவராஜை சிபிசிஐடி பொலிசார் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்று நடந்தவற்றை விளக்க சொல்லியுள்ளனர்.
கோகுல்ராஜ் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இடம், அவர்களை தான் பிரித்து சென்ற காட்சியை நினைவுபடுத்தி சிபிசிஐடி பொலிசாரிடம் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளிபாளையம் அருகே கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்திலும் விசாரணை நடந்துள்ளது.
யுவராஜின் பொலிஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால், நாளை மதியம் 2 மணிக்கு நாமக்கல் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துகின்றனர்.
யுவராஜ் இந்த வழக்கில் சரணடைவதற்கு முன், கேரளாவில் உள்ள மண்ணாறு காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
அவர் தலைமறைவாக இருந்த கடந்த 100 நாட்களில் 5 முறை சங்ககிரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் ஓடியோவை வெளியிட விலை உயர்ந்த அப்பிள் போனை பயன்படுத்திய அவர், அந்த போனை ஒரு முறை பயன்படுத்திவிட்டு உடைத்துள்ளார்.
இதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை பொலிசாருக்கு நேர்ந்துள்ளது.
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட மலைப்பகுதியில் அதிகாலையில் யுவராஜிடம் விசாரணை
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் சரணடைந்துள்ள யுவராஜிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை யுவராஜை கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் வைத்து சுமார் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி, ஏடிஎஸ்பி ஸ்டாலின் ஆகியோர் நடத்திய விசாரணையில், கோகுல்ராஜை தான் கொலை செய்ததாக யுவராஜ் ஒப்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து தான், இன்று அதிகாலை யுவராஜை சிபிசிஐடி பொலிசார் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்று நடந்தவற்றை விளக்க சொல்லியுள்ளனர்.
கோகுல்ராஜ் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இடம், அவர்களை தான் பிரித்து சென்ற காட்சியை நினைவுபடுத்தி சிபிசிஐடி பொலிசாரிடம் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளிபாளையம் அருகே கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்திலும் விசாரணை நடந்துள்ளது.
யுவராஜின் பொலிஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால், நாளை மதியம் 2 மணிக்கு நாமக்கல் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துகின்றனர்.
யுவராஜ் இந்த வழக்கில் சரணடைவதற்கு முன், கேரளாவில் உள்ள மண்ணாறு காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
அவர் தலைமறைவாக இருந்த கடந்த 100 நாட்களில் 5 முறை சங்ககிரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் ஓடியோவை வெளியிட விலை உயர்ந்த அப்பிள் போனை பயன்படுத்திய அவர், அந்த போனை ஒரு முறை பயன்படுத்திவிட்டு உடைத்துள்ளார்.
இதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை பொலிசாருக்கு நேர்ந்துள்ளது.
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட மலைப்பகுதியில் அதிகாலையில் யுவராஜிடம் விசாரணை
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் சரணடைந்துள்ள யுவராஜிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை யுவராஜை கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் வைத்து சுமார் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum