Top posting users this month
No user |
மஹிந்தவின் வீண் செலவுகளால் பலகோடி ரூபாய் நஸ்டம்! சம்பிக்க
Page 1 of 1
மஹிந்தவின் வீண் செலவுகளால் பலகோடி ரூபாய் நஸ்டம்! சம்பிக்க
கொழும்பில் மகிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த அரசு காலத்தில் கொழும்பில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டடத்தொகுதி என்பவை நிர்மாணிக்கப்பட்டன. எனினும், இதன்மூலம் அரசுக்கு பல மில்லியன் ரூபா நட்டம் மட்டுமே ஏற்பட்டது.
இதிலும் சுதந்திர சதுக்க வளாகத்தில் அமைக்கப்பட்ட மீன் தொட்டிக்கு மாத்திரம் 37 கோடி ரூபாவை அரசு செலவிட்டது. அதில் விடப்பட்ட ஒரு மீனின் விலை 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்டது.
இவ்வாறான திட்டங்கள்மூலம் பல கோடி ரூபாக்களை இழந்தது மட்டுமே மிச்சமாகும். அதாவது, கொழும்பு ஒரு வெள்ளை யானை போலவே காட்சியளிக்கின்றது.
எனினும், எமது அரசோ இலங்கையை தொழில்நுட்ப கேந்திர நிலையமாக மாற்றுவதையே குறியாகக் கொண்டுள்ளது.
இதற்காக கொழும்பில் துறைமுக நகரத்திட்டமும், கட்டுநாயக்கவில் விமான நிலைய நகரத்திட்டமும், ஹோமாகமயில் தொழில்நுட்ப நகரத்திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைப்போன்ற பிரம்மாண்ட திட்டமாகவே இருக்கும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சிப் பேதம் பார்க்காது உழைக்கத் தயாராகவே இருக்கிறோம் என்றார்
உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த அரசு காலத்தில் கொழும்பில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டடத்தொகுதி என்பவை நிர்மாணிக்கப்பட்டன. எனினும், இதன்மூலம் அரசுக்கு பல மில்லியன் ரூபா நட்டம் மட்டுமே ஏற்பட்டது.
இதிலும் சுதந்திர சதுக்க வளாகத்தில் அமைக்கப்பட்ட மீன் தொட்டிக்கு மாத்திரம் 37 கோடி ரூபாவை அரசு செலவிட்டது. அதில் விடப்பட்ட ஒரு மீனின் விலை 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்டது.
இவ்வாறான திட்டங்கள்மூலம் பல கோடி ரூபாக்களை இழந்தது மட்டுமே மிச்சமாகும். அதாவது, கொழும்பு ஒரு வெள்ளை யானை போலவே காட்சியளிக்கின்றது.
எனினும், எமது அரசோ இலங்கையை தொழில்நுட்ப கேந்திர நிலையமாக மாற்றுவதையே குறியாகக் கொண்டுள்ளது.
இதற்காக கொழும்பில் துறைமுக நகரத்திட்டமும், கட்டுநாயக்கவில் விமான நிலைய நகரத்திட்டமும், ஹோமாகமயில் தொழில்நுட்ப நகரத்திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைப்போன்ற பிரம்மாண்ட திட்டமாகவே இருக்கும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சிப் பேதம் பார்க்காது உழைக்கத் தயாராகவே இருக்கிறோம் என்றார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum