Top posting users this month
No user |
கெக்கிராவை நீதிமன்றத்தில் தீ விபத்து
Page 1 of 1
கெக்கிராவை நீதிமன்றத்தில் தீ விபத்து
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கெக்கிராவை நீதிமன்றத்தில் இன்று திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கெக்கிராவை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று காலை வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் காரணமாக வழக்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை பெரும் சேதத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதற்குள்ளிருந்த முக்கிய வழக்குகள் தொடர்பான சில பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுக்க முடிந்திருந்த போதிலும், இன்று விசாரிக்கப்படவிருந்த வழக்கொன்றின் தடயப்பொருளாக இருந்த ஆசிட் போத்தல் ஒன்று தீ விபத்தில் நாசமடைந்துள்ளது.
தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கெக்கிராவை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று காலை வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் காரணமாக வழக்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை பெரும் சேதத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதற்குள்ளிருந்த முக்கிய வழக்குகள் தொடர்பான சில பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுக்க முடிந்திருந்த போதிலும், இன்று விசாரிக்கப்படவிருந்த வழக்கொன்றின் தடயப்பொருளாக இருந்த ஆசிட் போத்தல் ஒன்று தீ விபத்தில் நாசமடைந்துள்ளது.
தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum