Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை

Go down

லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை Empty லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை

Post by oviya Sat Oct 03, 2015 1:50 pm

லஞ்சம் வாங்காமல் நேர்மையாக உழைத்து வந்த ரயில்வே பொறியாளர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அருகே ரயில்வே பொறியாளராக பணியாற்றி வந்த சவுரப் குமார், பணியில் மிக நேர்மையாகவும் கண்டிப்புடனும் செயலாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22-ம் திகதி கோரக்பூரில் இவர் வசித்து வந்த வீட்டில் முகம் சிதைந்து கொடூரமாக இறந்து கிடந்தார்.

மேலும் சவுரப் குமரின் நகங்கள் நீல நிறத்தில் மாறி போயிருந்ததைக் கண்டு, அவர் பாம்பு கடித்து இறந்துள்ளதாக கூறி பொலிசார் வழக்கை முடித்துள்ளனர்.

இதனிடையே அவரது சகோதரர் பிபின் குமார், பொலிசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தம்து சகோதரருக்கு உள்ளூர் மாபியாவிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இருந்து வந்ததாகவும்,

ரயில்வேயில் தேவையற்ற இரும்பு பொருட்களை டெண்டர் எடுக்க ஒரு கும்பல் முயன்று வந்ததாகவும்,

அந்த கும்பலுக்கு சாதகமாக செயல்பட தமது சகோதரர் மறுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த மாபியா கும்பல்தான் தமது சகோதரரை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum