Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரிக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்துக்கு மக்கள் வரவேற்பு! கிழக்கில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

Go down

மைத்திரிக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்துக்கு மக்கள் வரவேற்பு! கிழக்கில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் Empty மைத்திரிக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்துக்கு மக்கள் வரவேற்பு! கிழக்கில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

Post by oviya Sun Dec 28, 2014 1:16 pm

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வீதிகளில் கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.
முஸ்லிம் மக்கள் பெரும்பாலானோர் மைத்திரிபாலவை ஆதரிக்கவே திட்டமிட்டுள்ளனர் என்று முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் கட்சித் தலைமை முடிவை அறிவிக்கத் தாமதமானதால் மக்கள் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

பொது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்தை வரவேற்றுள்ள முஸ்லிம் மக்கள், வீதிகளில் ஒன்றுதிரண்டு பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முஸ்லிம் காங்கிரசின் முடிவு காரணமாக கிழக்கு மாகாணம் எங்கும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்தக்கூட்டத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். சிலர் பொதுநிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.

இதன்போது முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, இறைமை என்பன குறித்து ஆராயப்பட்டன.

ஏற்கனவே அமைச்சர் பெசில் ராஜபக்சää ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

எனினும் அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு மைத்திரிபாலவின் நோக்கி உள்ளமையால் அவருக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று முற்பகல் காங்கிரஸின் தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்கு நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் உயர் அரசியல்பீடக்கூட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப்ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் அமைச்சர் பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். குறித்த பேச்சுவார்த்தையில் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனறு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அரசியல் உயர்பீடத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் மைத்திரிபாலவுக்கே ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் மு.கா தலைவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிப்பதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார் நீதியமைச்சர் ரவுப் ஹகீம்.

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் தமக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்கும்படி மு.கா வால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைள் இனியும் நிறைவேறப்போவதில்லையெனும் கட்டத்திலேயே மேலதிக கால தாமதமின்றி இம்முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum