Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்?

Go down

அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்?  Empty அரசின் முக்கிய பிரமுகர்கள் பலர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்?

Post by oviya Sun Dec 28, 2014 1:06 pm

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு தப்பி செல்ல சகல ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தோல்வி ஏற்படும் பட்சத்தில் இவர்கள் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விடயத்தை இவர்கள் மறுத்தாலும் இந்த இரகசிய திட்டம் இவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுக்கு நன்கு தெரியும் என்ற அதிர்ச்சி தகவலை ஆங்கில இணையத்தளம் இன்று வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்பது உறுதியானதும் நாட்டில் இருந்து தப்பி செல்ல அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் தயார் நிலையில் இருந்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவர்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களும் இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.

இறுதிவரை மகிந்த ராஜபக்ஷவை பெற்றி பெற செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

அவர்களின் சகல முயற்சிகளும் தோல்வியடையும் பட்சத்தில் மாற்று வழியாக நாட்டில் இருந்து தப்பிச் செல்வது என தீர்மானித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.

இவர்களின் இந்த தயார் நிலை குறித்து அமைச்சர்கள் அறிய முடியாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் இதனை அறிந்து கொண்டால், அவர்கள் பொது வேட்பாளர் பக்கம் போவது நிச்சயமாகி விடும் என்பதால், அமைச்சர்களுக்கு இந்த விடயம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள், ஏற்படக் கூடிய நிலைமையில் தாம் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களுக்கு தெளிவுப்படுத்தி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum