Top posting users this month
No user |
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம்: ம.தி.முக. தீர்மானம் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம்: ம.தி.முக. தீர்மானம் (வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாநாட்டு பந்தல் முன் அமைக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் ’யுனெஸ்கோ பார்வையில் பெரியார்’ என்ற நூலை வைகோ வெளியிட்டார்.
மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்து கொண்டார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இடஒதுக்கீட்டை மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள வகைசெய்யும் உரிய அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்திட தமிழக அரசு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடக்கோரி ம.தி.மு.க. மக்களை திரட்டி போராட்டம் நடத்தும்.
வேளாண்மைத் தொழில் அழிந்துவிடாமல் பாதுகாக்க நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மத்திய அரசு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7 சதவீத வட்டியில் அளிக்கப்பட்டுவந்த வேளாண் கடனை இனி 11 சதவீத வட்டியில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது.
வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிலுவைத்தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்து பாதிக்கப்படும் தனிநபர் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
கர்நாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு தொடருகிறது.
இதற்கு முடிவுகட்ட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது, ராசிமணல் தடுப்பு அணைகள் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.
ஆலைக்கழிவுகளும், நகரக்கழிவுகளும் நதிகளில் கலப்பதை கண்காணித்து, தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 30 சதவீதம் கொள்முதல் ஆணைகளை சிறு, குறு தொழிலுக்கு ஒதுக்கிட வழிவகை காணவேண்டும்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவின் ஒருமைப்பாடு, வினாக்குறியாகிவிடும்.
மத்திய அரசு மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பன்னாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாநாட்டு பந்தல் முன் அமைக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் ’யுனெஸ்கோ பார்வையில் பெரியார்’ என்ற நூலை வைகோ வெளியிட்டார்.
மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்து கொண்டார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இடஒதுக்கீட்டை மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள வகைசெய்யும் உரிய அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்திட தமிழக அரசு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திடக்கோரி ம.தி.மு.க. மக்களை திரட்டி போராட்டம் நடத்தும்.
வேளாண்மைத் தொழில் அழிந்துவிடாமல் பாதுகாக்க நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மத்திய அரசு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7 சதவீத வட்டியில் அளிக்கப்பட்டுவந்த வேளாண் கடனை இனி 11 சதவீத வட்டியில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது.
வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிலுவைத்தொகையை வழங்குவதற்கு தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்து பாதிக்கப்படும் தனிநபர் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
கர்நாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு தொடருகிறது.
இதற்கு முடிவுகட்ட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது, ராசிமணல் தடுப்பு அணைகள் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.
ஆலைக்கழிவுகளும், நகரக்கழிவுகளும் நதிகளில் கலப்பதை கண்காணித்து, தமிழக அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 30 சதவீதம் கொள்முதல் ஆணைகளை சிறு, குறு தொழிலுக்கு ஒதுக்கிட வழிவகை காணவேண்டும்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவின் ஒருமைப்பாடு, வினாக்குறியாகிவிடும்.
மத்திய அரசு மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பன்னாட்டு பார்வையாளர்கள் முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum