Top posting users this month
No user |
ஆசிரியரை ஏமாற்றி தலித் மாணவிக்கு குங்குமம் வைத்த மாணவர்: பொலிசார் தேடுதல் வேட்டை
Page 1 of 1
ஆசிரியரை ஏமாற்றி தலித் மாணவிக்கு குங்குமம் வைத்த மாணவர்: பொலிசார் தேடுதல் வேட்டை
உத்திர பிரதேசத்தில் ராக்கி கட்டப் போவதாகக் கூறி தலித் மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்து பரபரப்பை ஏற்படுத்திய மாணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம், முர்லிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனுகுமார் (18). இவர் கடந்தாண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
அவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாணவி சோனுவுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் அம்மாணவியின் வகுப்பறைக்குள் சோனுகுமார் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இதை தடுத்த ஆசியரிடம் அவர் கையில் ராக்கி கட்டி அவரை சகோதரியாக ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆசிரியரும் அவனை வகுப்பறைக்குள் அனுமதித்தார்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில் கையில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அம்மாணவியின் நெற்றியில் வைத்து, "நீயே என் மனைவி" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
இதைப் பார்த்து ஆசிரியரும், சக மாணவ, மாணவியரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்குள் அவன் தப்பி சென்றுவிட்டான்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் செய்யப்பட்டது. அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்ததாக சோனுவை, பொலிசார் தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம், முர்லிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனுகுமார் (18). இவர் கடந்தாண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
அவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாணவி சோனுவுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் அம்மாணவியின் வகுப்பறைக்குள் சோனுகுமார் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இதை தடுத்த ஆசியரிடம் அவர் கையில் ராக்கி கட்டி அவரை சகோதரியாக ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆசிரியரும் அவனை வகுப்பறைக்குள் அனுமதித்தார்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில் கையில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து அம்மாணவியின் நெற்றியில் வைத்து, "நீயே என் மனைவி" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
இதைப் பார்த்து ஆசிரியரும், சக மாணவ, மாணவியரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்குள் அவன் தப்பி சென்றுவிட்டான்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் செய்யப்பட்டது. அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்ததாக சோனுவை, பொலிசார் தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum