Top posting users this month
No user |
Similar topics
வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
மாதவிடாய் வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
சீரகம்.
மிளகு.
ஏலக்காய்.
கருஞ்சீரகம்.
சுக்கு.
அத்திப்பிஞ்சு.
பசும்பால் .
இளநீர் .
செய்முறை:
சீரகத்தை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பசும்பால் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
பிறகு மிளகை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 50 மி.லி இளநீர் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
இதை போல ஏலக்காயை 100 மி.லி இளநீர் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
கருஞ்சீரகத்தை எடுத்து 250 கிராம் இளநீர் விட்டு பிசிந்து கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி ஒன்றிரண்டாக தட்டி அதில் 100 மி.லி பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் கழித்து பாலை மட்டும் நீக்கி விட்டு அதில் 100 மி.லி இளநீரை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பிறகு அதை எடுத்து உலர்த்தி இடித்து கொள்ளவும்.
அத்தி பிஞ்சை துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள அனைத்தையும் ஒன்றாக கல்ந்து மீண்டும் நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
மாதவிடாய் ஏற்படும் நேரங்களில் 2 தேக்கரண்டி அளவு இந்த பொடியை எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிடும் போது கடலை வகைகள், எண்ணெய் பலகாரங்கள், மொச்சை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை தவிர்க்கவும்.
நெடு நாட்களாக மாதவிடாய் வயிற்று வலி இருந்தால் மற்ற நாட்களில் இந்த மருந்தை 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.
மாதவிடாய் வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
சீரகம்.
மிளகு.
ஏலக்காய்.
கருஞ்சீரகம்.
சுக்கு.
அத்திப்பிஞ்சு.
பசும்பால் .
இளநீர் .
செய்முறை:
சீரகத்தை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பசும்பால் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
பிறகு மிளகை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 50 மி.லி இளநீர் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
இதை போல ஏலக்காயை 100 மி.லி இளநீர் ஊற்றி 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பின்பு அதை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
கருஞ்சீரகத்தை எடுத்து 250 கிராம் இளநீர் விட்டு பிசிந்து கழுவி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி ஒன்றிரண்டாக தட்டி அதில் 100 மி.லி பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் கழித்து பாலை மட்டும் நீக்கி விட்டு அதில் 100 மி.லி இளநீரை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் மூடி ஊற வைத்து பிறகு அதை எடுத்து உலர்த்தி இடித்து கொள்ளவும்.
அத்தி பிஞ்சை துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
இடித்து வைத்துள்ள அனைத்தையும் ஒன்றாக கல்ந்து மீண்டும் நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
மாதவிடாய் ஏற்படும் நேரங்களில் 2 தேக்கரண்டி அளவு இந்த பொடியை எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிடும் போது கடலை வகைகள், எண்ணெய் பலகாரங்கள், மொச்சை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை தவிர்க்கவும்.
நெடு நாட்களாக மாதவிடாய் வயிற்று வலி இருந்தால் மற்ற நாட்களில் இந்த மருந்தை 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum