Top posting users this month
No user |
Similar topics
உள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை! முதல்வரின் அதிரடித் தீர்மானம்!
Page 1 of 1
உள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை! முதல்வரின் அதிரடித் தீர்மானம்!
இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.
வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின.
இந்தநிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?, உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.
சபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.
அதனை கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.
முதலமைச்சர் தனது பிரேரணையில்,
ஏற்கனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
குறிப்பாக ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வு எதனையும் தராது என்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.
வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின.
இந்தநிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?, உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார்.
சபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.
அதனை கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.
முதலமைச்சர் தனது பிரேரணையில்,
ஏற்கனவே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
குறிப்பாக ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வு எதனையும் தராது என்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடமாகாண முதல்வரின் கோரிக்கை தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கர் ரணிலிடம் கேள்வி
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» சர்வதேச விசாரணையை கோரி யாழ்.நகரில் கையெழுத்துப் போராட்டம்
» மோசடிகாரர்கள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த தேசிய நிறைவேற்று குழு தீர்மானம்!
» சர்வதேச விசாரணையை கோரி யாழ்.நகரில் கையெழுத்துப் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum