Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்

Go down

சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம் Empty சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்

Post by oviya Fri Aug 21, 2015 3:37 pm

சீன எல்லையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றிவிட்டு வீரமரணம் அடைந்துள்ளார்.
வேலுரை சேர்ந்த ஜி.அண்ணாமலை (48), இந்திய ராணுவத்தில் அருணாசலபிரதேசத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பில் 201வது படைப்பிரிவில் சுபேதாராக பணிபுரிந்து வந்தார்.

அவர் கடந்த 18ம் திகதி காலை இந்திய-சீன எல்லையை கண்காணிப்பதற்காக ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஏவுகணை போன்ற ஆயுதம், ஏரியல் கோபுரத்தை தாக்கியது.

இதில் ஏரியல் துண்டாகி இவரது படைப்பிரிவினர் மலையில் விழும் அபாயத்தில் இருந்தபோது அனைவரையும் அண்ணாமலை காப்பாற்றியுள்ளார்.

ஆனால் மலைச்சரிவில் அண்ணாமலை விழுந்துவிட்டார். அப்போது மலையில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் பெரிய பாறை உருண்டு அண்ணாமலை மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

வீரமரணமடைந்த அண்ணாமலையின் உடல் நேற்று இரவு அசாம் தலைநகர் கவுகாத்தி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது ஊருக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும், வீரமரணமடைந்த அண்ணாமலைக்கு மனைவியும் 2 மகள்கள், மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum