Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார்

Go down

பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார் Empty பொலிசாரின் துப்பாக்கியை கைபற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட கைதி: சுட்டுக் கொன்ற பொலிசார்

Post by oviya Mon Aug 17, 2015 3:25 pm

பெங்களூரில் மனநல மருத்துவமனையில் பொலிசாரின் துப்பாக்கியை எடுத்து ரகளையில் ஈடுபட்ட கைதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி அருகே காவல் பைரசந்திரா பகுதியை சேர்ந்த விஸ்வநாத் (22), மீது வாகனங்களை தீவைத்து கொளுத்தியதாக வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டாக விசாரணை கைதியாக பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது விஸ்வநாத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் நகர ஆயுதப்படை பொலிசார், விஸ்வநாத்தை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நிமான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுநீர் கழிப்பதற்காக வார்டில் இருந்து வெளியே வந்த விஸ்வநாத், திடீரென்று அங்கிருந்த பொலிசாரின் அறைக்குள் நுழைந்து பொலிசார் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கியுள்ளார்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் துப்பாக்கியை தங்களிடம் கொடுக்கும்படி விஸ்வநாத்திடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் துப்பாக்கியை கொடுக்க மறுத்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால், விஸ்வநாத்தை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து சன்னல் மற்றும் கதவுகளையும் பூட்டியுள்ளனர்.

அவர் அறைக்குள்ளும் துப்பாக்கியால் சுவர்களில் சுட்டபடியே இருந்ததால், மத்திய பொலிஸ் படை, கர்நாடக கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர்.

அந்த அறையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமெரா மூலம், விஸ்வநாத்தின் நடவடிக்கையை கண்காணித்தனர்.

பின்னர் 3 மணிநேர போராட்டத்தை தொடர்ந்து கமாண்டோ படை வீரர்களில் 4 பேர், விஸ்வநாத் இருந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அவர்களை நோக்கி விஸ்வநாத் துப்பாக்கியால் சுட தொடங்கியதால், கமாண்டோ படைவீரர்கள் விஸ்வநாத்தை நோக்கி சுட்டுள்ளனர்.

இதில், அவரது வயிற்றில் குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததை அடுத்து, வயிற்றை துளைத்த குண்டை அகற்றி சிகிச்சை செய்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஸ்வநாத் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் பெங்களூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum