Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா

Go down

நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா Empty நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா

Post by oviya Mon Aug 10, 2015 2:56 pm

மும்பையை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா, ”நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன், அவர் எனக்கு நியாயம் வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.
பெண் சாமியார் ராதே மா (46) குட்டைப் பாவாடை அணிந்து திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

10 வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் 18 வயதில் மோகன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்த பின்னர் தன்னுடைய கணவரை பிரிந்து சாமியாராக வலம் வருகிறார்.

இந்நிலையில், மதத்தின் பேரை சொல்லி ராதே மா மக்களை ஏமாற்றி வருவதாக போரிவலியை சேர்ந்த ஒரு ஆர்வலர் பொலிசில் புகார் செய்த நிலையில், ராதே மா தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவுரங்காபாத் அருகே படேகாவ் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்த அவரை பொலிசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராதே மா நேற்று காலையில் மும்பை வந்த போது, தனது ஆண், பெண் சீடர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.

பின்னர் பேசிய அவர், தன் குடும்பத்தை பற்றி கூறுகையில், தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதர்கள் பற்றி நான் புகார் கூறமாட்டேன். ஏனெனில் நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன். அவர் எனக்கு நியாயம் வழங்குவார்.

நல்ல முடிவு எடுப்பதாக கடவுள் ஏற்கனவே என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum