Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் பொலிசில் சரண்

Go down

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் பொலிசில் சரண் Empty மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் பொலிசில் சரண்

Post by oviya Thu Aug 06, 2015 1:43 pm

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும், தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்க முற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் ஆகியோர் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரணடைந்த இருவரும் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில், தேர்தல்கள் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர்கள் இடையூறு செய்தமை தொடர்பில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.

இம்முறை பொதுத் ​தேர்தலில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரது ஆதரவாளர்களே இவ்வாறு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

வேட்பாளரின் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் காத்தான்குடியில் உள்ள நகர மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது அவர்களது கடமைக்கு குறித்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்த சம்பவத்தினையடுத்து, காத்தான்குடி பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அத்துடன், தேர்தல்கள் நிறைவடையும் வரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலதிக கலவரங்களை அடக்குகின்ற படையினரை ஈடுபடுத்தல், வாழைச்சேனை, சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பரபரப்பான நிலைமையொன்று காணப்படுவதனாலும் தேர்தல் தினத்தன்று வன்முறைகள் நிகழ்வதற்கான சாத்தியம் காணப்படுவதனாலும் அப்பிரதேசத்திற்கும் அப்பிரதேசங்களின் வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களுடன், உடனடியாக காத்தான்குடியில் நடைபெற்ற சம்பவங்களுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பிலிருந்து விசேட பிரதிநிதி ஒருவரும் காத்தான்குடி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் அதிகாரிகள் செயற்பட மாட்டார்கள் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.

பக்கச்சார்பின்றி தமது அதிகாரிகள் செயற்படுவதாகவும் நீதியான தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum